பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஸ்டாலின்-முதல்வர் சந்திப்பு…

போக்குவரத்து ஊழியர் தொடர்பான பிரச்சினையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியினை சந்தித்து சில கோரிக்கைகளை வைத்தார் மு.க ஸ்டாலின் சந்திப்பு எப்படி இருந்திருக்கும்? இப்படித்தான் இருந்திருக்கும்

எச்சரிக்கின்றது சீனா ….

இந்த சீனாவின் அழிச்சாட்டியம் எல்லை மீறுகின்றது, மாலத்தீவு பிரச்சினைக்கு இந்தியா படை அனுப்ப கூடாதாம், அனுப்பினால் பின் விளைவுகள் பயங்கரமாய் இருக்குமாம் இப்படி எச்சரிக்கின்றது சீனா காரணம் சீனாவின் முத்துமாலை திட்டத்தில் மாலத்தீவும் வருகின்றது, மாலத்தீவில் இந்தியா கால்வைப்பது தன் துறைமுகத்தை பாதிக்கும் செயல் என அஞ்சுகின்றது சீனா அது சொல்லட்டும் “இந்த மாபெரும் இந்திய தேசம் எங்கு படைகளை அனுப்ப வேண்டும், அனுப்ப கூடாது என்பதற்கு சீனாவின் அனுமதியினை ஏன் பெறவேண்டும்? எங்களை கட்டுபடுத்த அவர்களுக்கு […]

இன்று கிறிஸ்தவர்களின் சாம்பல் புதன்

இன்று கிறிஸ்தவர்களின் சாம்பல் புதன் அதாகபட்டது கிறிஸ்து இயேசு சிலுவலையில் அறையபட்ட வெள்ளிக்கு முன்பாக 40 நாள் விரதம் இருப்பது கிறிஸ்தவ சம்பிரதாயம், ஏன் என்றால் கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்தார், அதனால் இந்த 40 நாளாவது நமது பாவங்களை நினைத்து மன்னிப்பு கேட்டுவிடலாம், என்பது கத்தோலிக்க கிறிஸ்தவ மரபு அடுத்தால் செய்யபோகும் பாவத்திற்கு அடுத்த வருடம் 40 நாட்கள் மற்ற கிறிஸ்தவர்களில் சிலர் அனுசரிப்பார்கள், சிலர் பைபிளை படித்து, கரைத்து, உலுக்கி , கொட்டி பார்த்துவிட்டு […]

சிறந்த எழுத்தாளரான முத்துகுமார் ஏன் இப்படி சறுக்கினார்?

ஆர்.முத்துகுமார் மீது எப்பொழுதும் மரியாதை உண்டு. அரசியல் வரலாறுகளை அவரை விட்டால் அட்டகாசமாக எழுத இங்கு யாருமில்லை மிக துல்லியமான வரலாறுகள், எங்கிருந்தோ தொகுக்கபட்ட குறிப்புகள் என மனிதரின் உழைப்பு பாராட்டதக்கது ஒரு புத்தகத்திற்கு அவர் உழைக்கும் உழைப்பு மிக மிக சிரமானது என்பது படிக்கும்பொழுது புரிகின்றது, அதிசயிக்கதக்க உழைப்பு இப்பொழுது அவரின் திராவிட இயக்க வரலாறு இரண்டாம் பாகம் படித்துகொண்டிருக்கின்றேன், மனிதர் ஒரு இடத்தில் சறுக்கிவிட்டார் ஆம், ராமசந்திரனின் தந்தையார் இலங்கை கண்டியில் மாஜிஸ்ரேட்டாக இருந்தார் […]

பிப்ரவரி 12 1973 – பிப்ரவரி 12 2018

ஒரு விஷயத்தை திமுகவினர் சொல்வார்கள் என எதிர்பார்த்தோம், ஒருவரும் சொன்னதாக தெரியவில்லை. மறந்தார்களோ இல்லை அப்படி ஒன்று நடந்ததாக தெரியவில்லையோ என்னமோ? ஆனால் இதெல்லாம் நுணுக்கமான விஷயம், கொதிக்க வேண்டிய விஷயம் அதாவது திமுகவின் தொடக்ககால ஆட்சி நிச்சயம் நல்லாட்சியே, அண்ணாவிற்கு பின்னும் அது தொடர்ந்தது. இந்த ராமசந்திரன் கணக்கு கேட்டபொழுது சிக்கல் தொடங்கிற்று பெரியாரே அவரை அழைத்து ” ஏம்பா ராமசந்திரா கட்சி பொருளாளர் நீர்தானே? உனக்கு தெரியாத கணக்கா? நீதிகட்சி போல திமுகவினை அழித்துவிடாதே..” என […]

“ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே” : காதலர் தின வாழ்த்துக்கள் ….

போராடங்களுக்கு பஞ்சமில்லா நாடு இந்தியா, ஆனால் எதற்கு போராடவேண்டுமோ அதற்கு நிச்சயம் போராடமாட்டார்கள், அதாவது விட்டுவிடலாம் ஆனால் சில போராட்டங்களுக்கு மூளையினை விற்றுவிட்டு முட்டாள்களாக வருவார்கள் அதிலொன்று காதலர் தின எதிர்ப்பு போராட்டம் இவர்கள் சொல்வதென்ன? காதலர் தினம் இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது. நாங்கள் கலாச்சாரம் காக்க கிளம்பியவர்கள் விடமாட்டோம் இந்திய கலாச்சாரம் காதலுக்கு எதிரானதா? நிச்சயம் இல்லை பண்டைய இந்தியா காதலை வாழ்வின் ஒரு அங்கமாகவே வைத்திருந்தது அதனால்தான் அதன் அழியா காவியங்களில் எல்லாம் காதலுகொரு […]

சீமான் தமிழம் என்றொரு மதம் தொடங்கியிருந்தார்

கொஞ்ச நாளைக்கு முன்பு தமிழம் என்றொரு மதம் இவர் தொடங்கியிருந்தார் இனி இவர் பெயர் வீரசைமன், மனைவி பெயர் வீரகயல்விழி. வீட்டை அபகரிக்கும் தும்பிகள் எல்லாம் “வீர தும்பிகள்” இனி இவர் நடத்தபோவது “வீர மாநாடு”, இவர் நடத்திவைக்கும் திருமணம் “வீர திருமணம்”, இவர் அன்புசெழியன் போன்றவர்களுக்கு செய்யும் பஞ்சாயத்து “வீர பஞ்சாயத்து” இனி இவர் சந்திக்கபோகும் தேர்தல் “வீரதேர்தல்”, அதில் பறிபோகும் டெப்பாசிட் “வீர டெப்பாசிட்” இதில் அங்கிள் மறந்துவிட்ட விஷயம் ஒன்று உண்டு அதாவது […]

இன்று திருச்சிக்கு வருகின்றார் தங்க தலைவி

செயலாளர் Periya Samy கவனத்திற்கு இன்று திருச்சிக்கு வருகின்றாராம் தங்க தலைவி, முடிந்தால் அவரை சந்தித்து கட்சியின் கொள்கை, கோட்பாடு, அதன் அயரா உழைப்பு, மிக பெரிய நோக்கம், சிந்தனை , தலைவிக்காக சங்கம் நடத்தும் போராட்டம் இவற்றை பற்றி தெரியபடுத்தவும் ஒரு வேளை தலைவி மிக பரபரப்பாக இருந்து சந்திக்க முடியாவிட்டால் பரவாயில்லை, அதற்காக தீகுளிக்கும் முயற்சி எல்லாம் செய்ய வேண்டாம். இன்னொருநாள் பெரும் படையுடன் சென்று நீதி கேட்டுவிடலாம் திருச்சி வரும் எங்கள் தலைவிக்கு, “இரண்டாம் மங்கம்மாளுக்கு” […]

இந்திய ராணுவத்தை குறை சொல்கின்றாயா என பொங்குகின்றார்கள்

சீன ராணுவத்தின் பலத்தின் முன்பு இந்திய ராணுவபலம் சரிக்கு சமம் இல்லை என சொன்னால், “டேய் இந்திய ராணுவத்தை குறை சொல்கின்றாயா..” என பொங்குகின்றார்கள் ஆனால் ஒருவர் 3 நாளில் மிகபெரும் ராணுவத்தை இந்தியாவில் அமைப்பேன் என பகிரங்கமாக இந்திய ராணுவத்தை கலாய்க்கின்றார் அதனை விட ஒருவர் இந்திய ராணுவத்தை அவமானபடுத்த முடியாது ஆனால் அதன் பெயர் தேசபற்றாம், இவர்கள் ஆனந்த கண்ணீர் விடுகின்றார்கள் இவர்களும் இவர்களின் சிந்தனைகளும் ………..  

ராஜஸ்தானில் பூமிக்கடியில் தங்கம் கண்டுபிடிப்பு

ராஜஸ்தானில் பூமிக்கடியில் தங்கம் கண்டுபிடிப்பு, பிரமாண்ட தங்க சுரங்கம் அமைய வாய்ப்பு தங்கம் கிடைக்கட்டும், ஆனால் சுரங்கம் அமைப்பார்கள்? அம்பானியா , அதானியா இல்லை பீகாரை சுரண்டும் வேதாந்தா நிறுவணமா? இல்லை டாட்டாவா? இரும்பு சுரங்கத்தையே விடாத கூட்டமா தங்கத்தை விடும்? ஆக இதில் யாரோ ஒருவருக்கு பூதம் அள்ளிகொடுக்க போகின்றது.. பொறுத்து பாருங்கள், மோடி ஆட்சியில் காங்கிரஸ் மறைத்த தங்க சுரங்கம் கிடைத்துவிட்டது, இது பொன் விளையும் ஆட்சி என ஒரு கூட்டம் கிளம்பும்

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications