வாஸந்தி எழுதிய ஜெயலலிதா மனமும் மாயையும்
ஜெயலலிதா மனமும் மாயையும் என்ற புத்தகம் வாசித்துகொண்டிருக்கின்றேன், வாஸந்தி அட்டகாசமாக எழுதியிருக்கின்றார். பல விஷயங்கள் அதிர்ச்சி ரகம் முன்பே ஜெயலலிதாவால் தடுக்கபட்ட புத்தகம் என்பதால், மிக சமார்த்தியமாக ஜெயா தோழிகள், பத்திரிகையாளர் சோலை என பலர் சொல்லியதாகவே புத்தகத்தை கொண்டு செல்கின்றார் வாசந்தி பாதிவரை படித்திருக்கின்றேன் ஜெயலலிதா எனும் பெண்ணின் மனம் ஏன் அப்படி இறுகிபோனது என்பதை முதல்பாதி விளக்குகின்றது. அவர் நிச்சயம் புத்திசாலி ஆனால் இளமையில் இருந்து அவர் விரும்பிய எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை, விதி […]