பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வைகோ கலைஞரை சந்தித்து விட்டு கொடுத்த பேட்டி

பைபிளில் இயேசு சொன்ன ஊதாரி மைந்தன் கதைக்கு விளக்கம் வேண்டுமா? வைகோ கலைஞரை சந்தித்து விட்டு கொடுத்த பேட்டியினை பாருங்கள் புரியும் அது என்ன கதை என்றால், “ஒரு பணக்காரனுக்கு இரு மகன்கள் இருந்தனர், ஒருவன் சொத்த பிரித்துகொண்டு விற்றுவிட்டு வெளியூர் சென்றான் நாளாக நாளாக பணம் குறைந்தது, இறுதியில் பன்றி எல்லாம் மேய்த்தான், சில இடங்களில் அடியும் பட்டான் ஒருநாள் வறுமைதாங்காது என் தந்தை என்னை எப்படி எல்லாம் வைத்திருந்தார் தெரியுமா? அவரிடம் செல்வேன் என […]

இது என்ன ரஜினி சர்ச்சை?

இது என்ன ரஜினி சர்ச்சை?, அன்றே ராமசந்திரன் மலையாளி என பெரும் சர்ச்சை வெடித்த தமிழகம் இருந்தது, ஆனால் அவரை கலாய்க்க கலைஞர் போன்றவர்கள் இருந்தார்கள் “நான் ஒன்றும் சும்மா அல்ல, காந்தியுடன் உண்ணாவிரதம் இருந்தவன் நான்” என பதற்றத்தில் உளறுவார் ராமசந்திரன் “எது தெருமுனையில் பூக்கடை வைத்திருக்கின்றானே? அந்த காந்தியா?..” என கலாய்பார்கள் திமுகவினர் “நாங்கள் மலையாளி அல்ல, மன்றாடியார் பரம்பரை” என்பார் ராமசந்திரன் “டெல்லியில் மன்றாடிய பரம்பரை” என்பார் கலைஞர் “நடிகன் கட்சிக்கு என்ன […]

நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா?

ரஜினியின் ஜாதகத்தில் எந்த கட்டம் எப்படி என தெரியவில்லை, ஆனால் அவர் எங்கு சென்றாலும் பேச்சு அவரைபற்றியே இருக்க வேண்டும் என்பது அவர் விதி சினிமா, அயல்நாடு என எங்கெல்லாமோ அவரை பற்றிய பேச்சு வந்து, இப்பொழுது அரசியலுக்கும் வந்தாயிற்று எல்லா டிவிக்களும் பேசுகின்றன,அதில் வேந்தர் டிவியும் நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா? என பட்டிமன்றம் வைத்திருக்கின்றது இதில் திமுக சார்பாக ராதாபுரம் முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு என்பவரும் அழைக்கபட்டிருக்கின்றார் நடிகர்கள் என்ன கிழித்துவிட்டு அரசியலுக்கு வந்தார்கள் என்ற […]

அறிவாலயத்தில் “அக்னி நட்சத்திரம்”

ஸ்பெக்டரம் தீர்ப்பு வந்ததில் இருந்து ராக்கெட் வேகத்தில் இருக்கின்றார் கனிமொழி, ஆத்திக மாநாட்டை தொடர்ந்து நாடார் சங்கத்திலும் கலந்தாயிற்று போகிற போக்கை பார்த்தால் ஸ்டாலினுக்கு தினகரனும், ரஜினியும் மட்டும் சவால் இல்லை போலிருக்கின்றது அறிவாலயத்தில் “அக்னி நட்சத்திரம்” காட்சிகள் நடப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன‌  

தலைவியிடம் எவனோ டிவிட்டரில் வம்பிழுத்திருக்கின்றான்….

தங்க தலைவியிடம் எவனோ டிவிட்டரில் வம்பிழுத்திருக்கின்றான், தலைவி சீறி கொதித்து திட்டியிருக்கின்றார் இதற்கெல்லாம் அவர் ஏன் பதில் சொல்ல வேண்டும்? அவன் யார் என சொன்னால், அவனை கை, கால் வாய் எல்லாம் கட்டி சங்கம் தூக்கி வந்து அவர் காலில் போட்டுவிடாதா?  

தனி ஆளா வந்த நானே கெத்தா உட்கார்ந்திருக்கேன்…

“தனி ஆளா வந்திருக்க‌ நானே கெத்தா உட்கார்ந்திருக்கேன் 80 எம்.எல்.ஏ வச்சிருக்க ஸ்டாலின் வெளிய ஓடி ஓடி போறார் ஏன்? நம்ம அளவுக்கு தில் இல்ல போல, பாவம் பயந்த மனசுக்காரரா இருக்காரு நான் தனியாத்தான் இருக்கேன், அந்த பன்னீர், பழனிச்சாமி எல்லாம் என் முன்னாடி பேசட்டும் பார்க்கலாம்?” கவர்ணர் உரை மஸ்கோத் அல்லா போல உள்ளது : ஸ்டாலின் மஸ்கோத் அல்வா மிக சுவையானது, மிஸ்டர் ஸ்டாலின் இப்படியா வருங்கால முதல்வர் எனக்கு சுகர் இருக்கின்றது […]

ஐசரி வேலன் வழியில் நடக்கின்றார் லாரன்ஸ்…

மாட்டுகார வேலன் என்றொரு ராமசந்திரன் படம் உண்டு, படத்தில் அவர் மாட்டை மேய்த்தார், வேறு எதனை எல்லாம் மேய்த்தார் என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளவும் அதில் ஒருவர் வருவார், அது சரி என கூட சொல்ல தெரியாது ஐசரி ஐசரி என சொல்லிகொண்டே இருப்பார், காமெடி நடிகனுக்கும் கீழான ரோல் அப்படி ராமசந்திரனோடு நடித்தார், அப்படியே ஐசரி ஐசரி என சொல்லி தன் பெயரை ஐசரி வேலன் என்றே மாற்றினார் பின் ராமசந்திரன் கட்சியில் சேர்ந்தார், கான்ஸ்டபிள் […]

ரஜினிக்கு துணை என இந்த ராகவா லாரன்ஸ் …

“ஒரு பேய் அந்த வீட்டிலிருந்து வெளியேறியது, பின் வனாந்திரத்தில் தங்க இடமின்றி அலைந்துகொண்டிருந்தது, அந்த வீட்டை திருப்ப நோக்கியபொழுது அந்த வீடு அழகாக இருந்தது, உடனே அது தன்னிலும் பொல்லாத பல பேய்களை அழைத்து கொண்டு திரும்ப அந்த வீட்டுக்கே வந்தது அந்த வீட்டு நிலை முன்னிலும் மகா மோசமானது” இப்படி ஒரு வசனம் இயேசு சொன்னதாக பைபிளில் உண்டு, யாரை குறித்து எதற்கு சொன்னார்? , என்ன அர்த்தத்தில் சொன்னார்? என்பது இன்றுவரை எம் அறிவுக்கு […]

மனைவி லதா நிழலாக வருகின்றார்

முன்பெல்லாம் ரஜினி தனியாகத்தான் எல்லா விழாவிற்கும் வருவார், ஆனால் இப்பொழுதெல்லாம் மனைவி லதா நிழலாக வருகின்றார் எப்பொழுதிலிருந்து? அந்த லதா ரஜினி எம்.ஜி.ஆர் போல நல்லவர் என சொன்னதில் இருந்து பெண்கள் எப்பொழுதும் சில காரியங்களில் மகா கவனமாகவே இருக்கின்றார்கள்..   Like

திருப்பதி உண்டியல் பணத்திற்கு காவலர் எதற்கு? பகவானுக்கு சக்தி இல்லையா? : கனிமொழி

திருச்சியில் கனிமொழி சர்ச்சை பேச்சு பேசியிருக்கின்றார், “திருப்பதி உண்டியல் பணத்திற்கு காவலர் எதற்கு? பகவானுக்கு சக்தி இல்லையா?” என்று பேசியிருக்கின்றார் இதெல்லாம் நிச்சயம் நல்ல பலனை கொண்டுவராது, வெறும் கடவுள் மறுப்பு ஒருவோட்டு கொண்டுவராது என்றுதான் அண்ணாவே ஒன்றே குலம், ஒருவனே தேவன் என ராகத்தை மாற்றினார் கலைஞர் பிராமணர்களை சாடுவாரே அன்றி, இம்மாதிரி விஷயங்களை எல்லாம் கவனமாக கையாள்வார். என்னதான் பகுத்தறிவு பேசினாலும் திருவாரூர் தேரை எல்லாம் பழுதுபார்த்து கொடுத்து சில காரியங்களில் கவனமாக இருப்பார். […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications