பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நடராஜன் என்ன நாட்டு தியாகியா?

மறுபடியும் தான் ஒரு அவசர குடுக்கை என நிரூபித்திருக்கின்றார் சசிகலா 15 நாள் பரோல் எதற்கு? கணவனை நலம் விசாரிக்க 3 நாள் போதாதா என கேட்கமாட்டார்களா? கொஞ்சம் அவசரபடாமல் இருந்திருந்தால் நிச்சயம் சிறைக்கோலம் உடனே கிட்டியிருக்காது, முதலமைச்சராக அவர் காட்டிய அவசரமே அவரின் சிக்கலுக்க்கு காரணம் அது இருக்கட்டும் அம்மணிக்கு எதற்கு பரோல்? ஒரு பர்தாவினை மாட்டிவிட்டு கிளம்பிவிட வேண்டியதுதானே? நடராஜன் உறுப்பு மாற்ற சிகிச்சைக்கு தமிழக அரசு ஒத்துழைகவில்லை : சீமான் ஆக்ரோஷம் ஏம்பா […]

எங்கே சென்றுவிட்டார் தமிழிசை, கமல்?

இந்திய பொருளாதர தடுமாற்றம், தாஜ்மகால் சிக்கல், சசிகலா பரோல் மறுப்பு என பல சர்ச்சைகள் சூழ்ந்துள்ள நிலையில் தமிழிசையினை காணவில்லை ஸ்டாலின் செல்லும் காரில் 4 வீல்தான் இருக்கிறது, வங்க கடலுக்கு அப்பால் தாமரை உதிக்கும் என்றெல்லாம் சொல்லிகொண்டிருந்த அம்மணியினை காணவில்லை எங்கே சென்றுவிட்டார்? ஏதும் மாறுவேடத்தில் திமுக கூட்டங்களில் கலந்து குறிப்பெடுக்கின்றாரோ?   முன்பொரு காலத்தில் முகலாயர் சர்ச்சை வந்தபொழுது, முகலாயர்கள் அந்நியர்கள் அல்ல, இத்தேசத்திற்கு மங்கா அடையாளம் வழங்கிய இந்தியர்கள் என சொன்ன கமலஹாசன் […]

திருப்பூர் குமரன் பிறந்த நாள்

அது வெள்ளையன் சைமன் கமிஷன் எனும் கமிஷனை அமைத்திருந்த 1928ம் ஆண்டு காலம், வெள்ளையன் கமிஷன் என்பது இன்று தமிழக அரசு அமைக்கும் கமிஷனை போன்றதுதான் அன்று இருந்த கொந்தளிப்பை அடக்க இம்மாதிரி கமிஷன்களை வெள்ளையன் அமைப்பான், அப்படி அன்று வந்தது சைமன் கமிஷன் , அதாவது அந்த கமிஷனின் தலைவர் பெயர் ஜாண் சைமன் (நாம் தமிழரின் கமிஷன் சைமன் வேறு) இதனை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடந்தது, ஒருங்கிணைந்த இந்தியாவில் பஞ்சாப் சிங்கம் லாலா […]

சுப்பிரமணிய சிவா பிறந்த நாள் இன்று..

அவர் பெயர் சுப்பராமன், ஆனால் பேசிவிட்டால் சிவ நடனம் போல பேச்சில் தாண்டவம் இருக்கும் அதனால் சிவம் என்றழைக்கபட்டார்,சுப்புராமன் சிவம் என்பது பின்னாளில் சுப்பிரமணிய சிவா ஆயிற்று தமிழகம் தந்த மாபெரும் தியாகி அவர். மிக சிறந்த மேடை பேச்சாளர், இந்துமதத்தின் மீது அபார பற்றுகொண்டவர். காந்திக்கு முந்தைய காலத்தின் தியாகி சுதந்திர போராட்டத்தில் காந்தியின் வருகை முக்கியமெனினும் இவர் போன்ற தியாகிகள் ஏற்றிவைத்த நெருப்பைத்தான் காந்தி பெரிதாக்கினார் என்பதில் அய்யமில்லை. சுப்பிரமணிய சிவா கிட்டதட்ட பசும்பொன் […]

பராமரிப்பின்றி கிடக்கின்றது கம்பன் சமாதி : செய்தி

நாட்டரசன் கோட்டை அருகே பராமரிப்பின்றி கிடக்கின்றது கம்பன் சமாதி : செய்தி வள்ளுவனுக்கும், இளங்கோவிற்கு பின் தமிழுக்கு அழியா காப்பியம் கொடுத்தவன் கம்பன், தமிழ்தாய்க்கு அவன் சூட்டிய மகுடம் அது. ஆனால் அந்தோ பரிதாபம் அவன் சமாதி தேடுவாரற்று கிடக்கின்றது. தமிழ், தமிழர் என் 60 ஆண்டுகாலம் ஆண்டவர்கள் ஆட்சியில் அந்த ஆதிதமிழனுக்கொரு அங்கீகாரமில்லை ராமசந்திரனுக்கும், ஜெயலலிதாவிற்கும் மணிமண்டபம் கட்டும் தமிழகத்தில் தமிழ்தாயின் தலைமகனுக்கோர் இடமில்லை அவன் அப்படி என்ன செய்துவிட்டான்? ஆம், ராமனின் கதையினை அழகு […]

அவர் மா.பொ.சியா? ம.போ.சியா?

பத்மநாபா கொல்லபட்டபொழுது சென்னையில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் பிரபாகரனை மிக மிக வன்மையாக சாடியவர் ம.பொ.சி ஒருகாலமும் பிரபாகரனால் ஈழம் அமையாது எனவும், அந்நாட்டை பிரபாகரன் சுடுகாடு ஆக்குவார் எனவும் சொன்னது அவர்தான் அதற்கும் மேலாக சொன்னார், “தமிழக இளைஞர்கள் இந்த பாசிச புலிகளிடம் மிக மிக கவனமாக இருக்கவேண்டும், இவர்களால் பலர் வாழ்வை தொலைக்க நேரிடும் ஜாக்கிரதை” அவர் சொன்னதையும் கேளாமல் வாழ்வை தொலைத்தவர்கள்தான் ராஜிவ்கொலை கேமரா ஹரிபாபு, இப்போது பரோலில் வந்த பேரரிவாளன், நளினி […]

நமது பதிவுகள் எங்கெல்லாமோ செல்கின்றன

நமது பதிவுகள் எங்கெல்லாமோ செல்கின்றன, யாரெல்லாமோ எடுத்து போட்டுகொள்கின்றார்கள். நல்லது அப்படியே இந்த குஷ்பூ பதிவுகளை யாராவது அவரிடம் சேர்த்தால் சங்கம் அவனுக்கு மிகுந்த நன்றியுடையதாக இருக்கும் ஆனால் ஒருவருக்கும் எம் நன்றிக்குரியவனாக இருக்க விருப்பமே இல்லை என்பது மட்டும் புரிகின்றது.

காந்தி கொள்கைகளை பின்பற்றுவதால் தமிழகம் அமைதியாக உள்ளது : பன்னீர் செல்வம்

காந்தி கொள்கைகளை பின்பற்றுவதால் தமிழகம் அமைதியாக உள்ளது : பன்னீர் செல்வம் எவ்வளவு அருமையான வார்த்தைகள், அட பன்னீரும் இப்பொழுதெல்லாம் உண்மை பேசுகின்றார். பின்னே? அவரை முதல்வராகவும், இவரை துணை முதல்வராகவும் தமிழகம் மிக பெரும் சகிப்புதன்மையுன் பொறுத்துகொண்டிருக்கின்றது என்றால் அது காந்தி காட்டிய “அஹிம்சை” வழியாக அன்றி எதுவாக இருக்க முடியும்? சத்தியசோதனை  

ம.பொ.சிவஞானம் எனும் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்

தமிழுக்காக தமிழருக்காக‌ திமுக மட்டும் பாடுபட்டது என்பதே பெரிய பொய், அதனைவிட பெரும் பொய் சீமானின் கட்சியும் இன்னும் சில தமிழ் தேசிய அலப்பறை கட்சிகளும். ஆனால் தமிழுக்காக, தமிழருக்காக வாழ்ந்த மிக சிலர் உண்டு அதில் ஒருவர்தான் ம.பொ.சிவஞானம் எனும் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் கம்பராமாயணத்திலும், சிலப்பதிகாரத்திலும் அவ்வளவு ஆழ்ந்த அறிவு அவருக்கு இருந்தது. சிலப்பதிகாரத்தை அவர் சொல்லிய அளவிற்கு யாரும் சொல்லவில்லை இதனால்தான் “சிலம்பு செல்வர்” என அழைக்கபட்டார். திமு கழக தலைவர்கள் டமாரங்கள், […]