பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

122 இலாக்களுக்கு எங்கு செல்வார் மனிதர்?

122 அமைச்சர்கள் கொண்ட பெரும் மந்திரி சபையினை அமைக்காமல் இனி பழனிச்சாமி அரசு நீடிக்க வாய்ப்பில்லை 122 இலாக்களுக்கு எங்கு செல்வார் மனிதர்? இனி ஏராளமான இலாக்காக்கள் உருவாக்கபடும், செய்தி துறை டிவிட்டர் இலாகா, பேஸ்புக் இலாக்க இலாகா என பிரியலாம் நிதி துறை 50 ரூபாய் நோட்டு பரிவர்த்தனைக்கு ஒரு இலாக்கா, 100 ரூபாய் நோட்டுக்கு இன்னொரு இலாகா, சில்லறைக்கு ஒரு இலாக்கா என பிரியலாம் பொதுபணிதுறை என்பது சிமெண்ட் இலாகா, செங்கல் இலாகா, கம்பி […]

வெல்ல பிறந்தவன் : முடிவுரை

அலெக்ஸாண்டரை பற்றி சொல்லும்பொழுது பல விஷயம் முரண்படுகின்றது என்கின்றார்கள சிலர், அவர்களுக்கு சில விஷயங்களை சொல்லவேண்டும். இந்திய வரலாற்றை நமக்கு கொடுத்தது யார் என நினைக்கின்றீர்கள்? வெள்ளையர்கள் அவர்கள் தொகுத்ததுதான் வரலாறு, பல இடங்களில் தங்களுக்கு சாதகாகமாக வளைத்தார்கள். இன்று நாம்படிக்கும் வரலாறு பல மர்ம பக்கங்களை உள்ளடக்கியது, நிறைய விஷயங்களை மறைத்திருப்பார்கள் ஐரோப்பியர்கள். அவர்களின் பெருமை அப்படி. ஐரோப்பியர்தான் பெரியவர்கள் என்பது அவர்கள் நினைப்பு, வரலாற்றில் அலெக்ஸாண்டர், சீசர், நெப்போலியன் என்றுதான் வகைபடுத்துவார்கள் இவர்களை விட […]

ஊதாரி மைந்தனின் கதை நினைவுக்கு வருகின்றது

இயேசுநாதர் சொன்ன , சொல்பேச்சு கேளாத ஊதாரி மைந்தனின் கதை நினைவுக்கு வருகின்றது.   பா.ஜ.க. என்னும் பெரிய மீன், அ.தி.மு.க என்ற சின்ன மீனை விழுங்கும்: சீமான் பின் இலை எப்படி மலரும்? இலை மலராமல் ஈழம் எப்படி மலரும்? உங்கள் புரட்சிபடையுடன் சென்று, எளிய தமிழ் பிள்ளைகளின் யுத்தம் நடத்தி அந்த சின்ன மீனை மீட்க கூடாதா? இந்த சின்ன மீனை பெரிய மீன் விழுங்கிவிட்டால், திமுக எனும் சுறா, அதாவது உங்கள் பாணியில் […]

வெல்ல பிறந்தவன் : 11

பாபிலோன் திரும்பிய அலெக்ஸாண்டருக்கு எல்லாமே முரணாக நடந்தன‌ அவனின் மிக‌ பரந்த பேரரசில் ஆங்காங்கு எழும்பிய கலவரங்கள் இப்பொழுது தீவிரமாயின, காரணம் அந்த கடைசி யுத்தம். ஒருவன் வெற்றிமேல் வெற்றி பெரும்வரைதான் அடங்கியிருப்பார்கள், அவன் சறுக்க ஆரம்பித்தால் அவன் நிழல் கூட அவனுக்கு அடங்காது. அலெக்ஸாண்டருக்கும் இதே சிக்கல் வந்தது. போராஸுக்கு மட்டும் நாட்டை திரும்ப கொடுப்பாராம், எங்களுக்கு கொடுக்கமாட்டாராம் என்பன போன்ற குரல்கள் எதிரொலித்தன, பார்மீனியோவினை கொன்றபின் அலெக்ஸாண்டரின் தளபதிகள் அலெக்ஸாண்டரை நம்பவில்லை, அலெக்ஸாண்டருக்கு அவர்களுக்கும் […]

அடிமைகள் ஒழிப்பு தினம்

மானிட குலம் எவ்வளவோ கொடும் காலங்களை, நினைத்தாலே குலை நடுங்கும் விஷயங்களை கடந்துதான் வந்திருக்கின்றது, அதிலொன்று அடிமை முறை. சக மனிதனை அடக்கி நீ என் அடிமை என வைத்துகொள்வதும், அவனுக்கு பிறக்கும் சந்ததிகளையே தனக்கு அடிமை என வைத்துகொள்வதும் அந்நாளைய கொடும் வழக்கம். ஆச்சரியமாக அந்நாளைய மதங்களும் அதனை அங்கீகரித்திருக்கின்றன‌ அப்படி அடிமை மனிதன் என்பவன் ஆடுமாடுகளில் ஒன்று, கூடுதல் உரிமையாக வாய் மட்டும் பேசிகொள்ளலாம், அவனுக்கு குடும்பம் இருக்கலாம், ஆனால் எப்பொழுது வேண்டுமானாலும் எஜமான் […]

புதிய 200 ரூபாய் நோட்டு

புதிய 200 ரூபாய் நோட்டு செப்டம்பரில் வருகின்றது மத்திய அரசு அறிவிப்பு இரண்டாயிரம் ரூபாய் நோட்டு ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக மிக தாமதமாக வந்து பல குழப்பங்கள் ஏற்பட்டன, அதனால் இம்முறை 200 ரூபாய் நோட்டு முதலில் வந்து அடுத்து 100 ரூபாய் நோட்டு செல்லாதது ஆக்கபடலாம் ஆயிரம் ரூபாய் நோட்டால் கருப்பு பண‌ பதுக்கல், தீவிரவாதம் என பிரச்சினைகள் இருந்தன, அதனை செல்லாதது ஆக்கியதால் அப்பிரச்சினைகள் முடிந்தன என மத்திய அரசு சொல்லிகொண்டிருக்கின்றது இந்த 100 […]

காலம் எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கு வைத்திருக்கின்றது

கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு முன், அந்த ராமசந்திரன் காலமான பின், இதே போன்ற பெரும் குழப்பம் அதிமுகவில் இருந்தது, ஜாணகி ஜெயா அணிகள் மோதிகொண்டிருந்தன‌ இதில் ஜெயா பக்கம் நடராஜனும், ஜாணகி பக்கம் ஆர்.எம் வீரப்பனுமாக நின்று மோதிகொண்டிருந்தார்கள். மத்தியில் பலமான ராஜிவின் ஆதரவு ஜெயாவிற்கே இருந்தது. இந்த அதிமுக சண்டை காரணமாக இரட்டை இலை முடக்கபட்டது, அது இல்லா தேர்தலில் கலைஞர் ஆட்சிக்கும் வந்தார். அதன் பின் அதிமுக அணிகள் இணைந்தன, இரட்டை இலை மீட்கபட்டதும், […]

மெட்ராஸ் டே

சீனாவின் பட்டும், இந்திய மிளகும் பட்டுசாலை எனும் சாலை வழியாக துருக்கி மூலம் ஐரோப்பாவினை அடைந்துகொண்டிருந்தன, அது ஒன்றே பிரதான இணைப்பு. அலெக்ஸாண்டர் காலம் முதல் போப்பாண்டவர்கள் உச்ச காலம் வரை அது ஐரோப்பியர் கட்டுபாட்டிலே இருந்தது, வியாபாரம் அதன் மூலமே நடந்தது. இது யார் கட்டுபாட்டில் இருப்பது என்று தொடங்கிய அரசியல் போர், பின் மதச்சாயம் பூசப்பட்டு சிலுவைப்போர் என தொடர்ந்தது, வலுவான துருக்கியர் அனாசாயமாக விரட்டினர், இந்நிலையில்தான் எப்படியோ ஆசியா சுற்றி வந்து , […]

தமிழன் தலையில் கோமாளி குல்லா : கமல்ஹாசன்

1990களில் பர்னாலா என்றொரு ஆளுநர் இருந்தார், ராமசந்திரன் இறந்து அதிமுக பிளவுபட்டு கலைஞர் முதல்வரான நேரத்தில் அவர்தான் தமிழக ஆளுநர். சந்திரசேகர் ஆட்சி ராஜிவ் தயவில் நடந்துகொண்டிருக்க, தமிழகத்தில் கலைஞர் ஆட்சியினை கலைக்கும்படி ஜெயா ராஜிவினை நெருக்க, ராஜிவ் சந்திரசேகரை நெருக்கினார். ஒரு ஆட்சி சட்டபடி கலைக்கபட ஆளுநரின் அனுமதி அவசியம். தமிழகத்தில் ஒரு அசாதரண நிலையுமில்லை, இங்கு ஆட்சி கலைக்க அவசியமில்லை, அப்படி ஒரு அறிக்கை தரமாட்டேன் என உறுதியாய் நின்றார் பர்னாலா. அது எப்படி? […]