பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

குஷ்புவே நமஹ! :  6

  குஷ்பு ஒரு பெரியாரிஸ்ட்!   எடப்பாடியும் பன்னீரும் என்ன ஆனால் என்ன? சீனா போர் முரசு கொட்டினால்தான் என்ன? வடகொரியா என்ன ஏவுகனை சோதனை செய்தால் நமக்கென்ன? நம் கடன் குஷ்பூ புகழ் பாடிகொண்டிருப்பதே, அதுவே நம் சுதர்மம். மணவாழ்வில் புகுந்த குஷ்பூவும் இல்லறத்தை நல்லறமாக நடத்தினார். கொங்குநாட்டு மருமகள் ஆகியிருந்தார். அவ்வகையில் ஜோதிகாவுக்கு குஷ்பூதான் சீனியர். முதல் குழந்தை பிறந்தபின் அளித்த பேட்டியில் சொல்லியிருந்தார் “திருமணமான பெண்ணிடம் யாரும் சொத்து எவ்வளவு? வருமானம் எவ்வளவு? […]

தனுஷின் விஐபி 2 படம் ஊத்தி மூடிகொண்டது

தனுஷின் விஐபி 2 படம் ஊத்தி மூடிகொண்டது. முதல்பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் கதை தொடர்பு இல்லாமல், அந்த பரபரப்பிலே படம் எடுக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தால் இப்படித்தான் முடியும். மருமகன் கப்பல் கவிழ்ந்துவிட்டது அவரின் மாமனாரும் “கபாலி” எனும் தோல்வி படத்தின் இரண்டாம் பாகத்தினை, இப்பொழுது “காலா” என எடுத்துகொண்டிருக்கின்றார். கொஞ்சம் சுதாரித்தால் மாமனார் தப்பலாம், இல்லாவிட்டால் நிச்சயம் மருமகன் வழிதான்

அந்தணன் சண்முகம் : பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அதே நேரம் உண்மையினையும் எழுதுவது ஒரு கலை, அந்த கலையினை நிரம்ப பெற்றிருப்பவர் Anthanan Shanmugam அவர்கள் பத்திரிகையாளர், சினிமா தயாரிப்பாளர் எல்லாவற்றிற்கும் மேல் தமிழ்கத்தில் விரல்விட்டு எண்ணகூடிய ரசனை மிகுந்த எழுத்தாளரில் ஒருவர் அவருக்கு இன்று பிறந்தநாளாம், வாழ்த்துவோம் நிச்சயமாக அவர் திரையுலக அந்தணன். அந்த அளவு திரையுலகின் எல்லா விதிகளும், ஆகமங்களும் அவருக்கு அத்துபடி. அரசியலில் துக்ளக் பத்திரிகை போல , சினிமா செய்திகளுக்கு அவரின் தளம் என்பதுதான் மகா பொருத்தமானது. […]

கமலஹாசா.. காயத்திரி தாசா

பிந்துமாதவி சில்க் ஸ்மிதாவின் நெருங்கிய உறவினர் போலவே இருப்பது ஆச்சரியம். ஆனால் சில்க் ஸ்மிதாவின் காந்த‌ கண்கள் மட்டும் மிஸ்ஸிங். அடேய் இருட்டு மூஞ்சி திருட்டு முழி சிநேகா.. தமிழ்தாய் வாழ்த்து எழுதியவரை தெரியாத நீயெல்லாம் தமிழ் கவிஞனா? அந்த பின்மண்டை முடியினை இழுத்து வைத்து கேட்கின்றோம்.. டேய் தருமி, எவனோ மண்டபத்தில் எழுதிய பாடலை இசையமைப்பாளரிடம் சொல்லி நீ எல்லாம் கவிஞனாகிவிட்டாய் அப்படித்தானே? உண்மையினை சொல்.   ஏம்பா பிக்பாஸ்?, அந்த காயத்திரி எங்கள் செல்லபிள்ளை […]

வெல்ல பிறந்தவன் : 08

அலெக்ஸாண்டர் படையினை மூன்றாக பிரித்திருந்தான், இடதுபக்கம் காலாட்படை வலதுபக்கம் குதிரைபடை என நிருத்தியிருந்தான் முன்றாம் அணியினை தனக்கு பின்னால் நிறுத்தியிருந்தான். அப்பக்கம் நடுவில் டேரியஸ் இருந்தார், அவரை சுற்றி மெய்பாதுகாவல் படை இருந்தது இடது பக்கம் குதிரைபடை, தேர் படைகள் இருந்தன, வலது பக்கம் காலாட்படை இருந்தது. யார் சங்கு ஊதினார்களோ தெரியாது, சிக்னல் கொடுத்தான் அலெக்ஸாண்டர். போரை அவன்தான் முதலில் தொடங்கினான், தன் பலமிக்க குதிரைபடையினை டேரியசின் காலாட் படையினை நோக்கி ஏவினான் டேரியரின் அம்புபடை […]

ஒரு நாடக கம்பெனி இப்பொழுது சர்கஸ் கம்பெனியாகி விட்டது

அக்கட்சியின் முதல்வர்களை யாரும் பேசிவிட முடியாது, எம்ஜிஆரை விமர்சித்தவர்கள் உயிருக்கே ஆபத்து என்றொரு நிலை இருந்தது ஜெயா பற்றி பேசிவிட்டால் நீதிமன்றத்திலே தங்கிவிடும் அளவிற்கு வழக்குகள் பாயும். அவதூறு வழக்கு போடுவதற்கு என்றே ஒரு வழக்கறிஞர் அணி அவரிடம் இருந்தது. அப்படிபட்ட அதிமுகவின் இப்போதைய முதல்வரை ஒருவர் 420 என அழைக்கின்றார், பதிலுக்கு முதல்வரும் நீ 420, உன் தாத்தா 420 என பள்ளிகுழந்தை போல சொல்லிகொண்டிருக்கின்றார். எம்ஜிஆர், ஜெயா பாணியிலிருந்து எவ்வளவு விலகிவிட்டார் பழனிச்சாமி? எப்படியோ […]

கலைஞரை பற்றி தெரியாதா?

கொஞ்சம் பேர் கிளம்பிருக்கின்றான், கலைஞரை பற்றி தெரியாதா? அவர் ராஜாஜியினை எதிர்த்தார் பின் இணைந்தார், இந்திராவினை எதிர்த்தார் பின் வரவேற்றார், பிராமணரை எதிர்த்தார் பின் வாஜ்பாயோடு சேர்ந்தார், மானமே இல்லாதவர் அவரெல்லாம் சீ..சே என சொல்லிகொண்டே இருக்கின்றான் சரி கலைஞருக்கு மானமில்லை. காமராஜரை எதிர்க்க கலைஞரோடு சேர்ந்த ராஜாஜிக்கு மானமில்லையா? தான் உருவாக்கிய எம்ஜிராமசந்திரன் தன்னை மீறி சென்ற பொழுது கலைஞர் பக்கம் வந்த இந்திராவிற்கு மானமில்லையா? “அடேய் நீ பிராமணனை எப்படி எல்லாம் பேசினாய், உன்னிடம் […]

பட்டினத்தார்

பட்டினத்தார் என்றொருவர் இருந்தார். நகரத்தார் எனும் பூம்புகார் செட்டியார். பெரும் பணக்காரர். சொத்து இருக்குமிடத்தில் சொந்தம் வரும், அது சுருட்டவும் வரும். கிட்டதட்ட எம்.ஏ ராமசாமி செட்டியார் போல மனம் வெறுத்த பட்டினத்தார் துறவியானார். ஞானம் பெற்றார், தத்துவமும் திருவோடுமாக அலைந்தார். ஒரு கட்டத்தில் இந்த திருவோடும் மீதும் எனக்கு ஆசை வந்ததே என சொல்லி தூர எறிந்தார். வாழ்வின் தொடக்கம் இனிமை, முடிவு கசப்பு என பொருளில் கரும்பினை கையில் சில நேரம் வைத்து தத்துவம் […]

பலியாகும் குழந்தைகள்…

கும்பகோணம் பள்ளி எரிந்து குழந்தைகள் பலியான வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை ஆம் உண்மை குற்றவாளிகள் இரண்டு பேர். அவர்களை தண்டிக்க முடியாமல் நீதிமன்றம் கையினை பிசைகின்றது. ஒன்று பாழாய்போன தேசத்தில் பிறந்த அந்த குழந்தைகள். அடுத்து அந்த பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பிய அந்த பெற்றோர். இதில் குழந்தைகள் இல்லை அதனால் அந்த பெற்றோரை பிடித்து நீதிமன்றம் தண்டித்திருக்க வேண்டும். ஆனால் பெருந்தன்மையாக விட்டுவிட்டது எப்படி இப்படி குற்றவாளிகள் தப்பிக்கலாம்? நீதிதுறையினை நிச்சயம் மறுசீரமைப்பு செய்து அந்த […]

டிரம்ப் மகள் இவாங்கா ஜாக்கிரதை..

டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப் இந்தியா வருகின்றார் அவர் சிம்பு கண்ணில் படாமல் செல்லட்டும், ஒருவேளை சிம்பு பார்த்துவிட்டால் “என்னோடு அடுத்தபடம் நடிக்க தயாரா? என்னோடு நடித்தால் உனக்கும் பெருமை , உங்க அப்பனுக்கும் பெருமை” என அழிச்சாட்டியம் படுபயங்கரமாக இருக்கும்.