பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்கள் முடக்கம்

அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியிருக்கின்றது, நிச்சயம் அது முறைகேடான சொத்துக்கள், இல்லையென்றால் அத்துறைக்கும் அமைச்சருக்கும் என்ன வாய்க்கால் தகறாரா? இந்த ஊழல் அமைச்சர் இன்னும் பதவியில் நீடிக்கின்றார், நிச்சயம் அக்கட்சியிலிருந்து ஒரு குரலும் வராது, ஒரு திருடன் இன்னொரு திருடனை குற்றம் சொல்லமாட்டான், தொழில் அப்படி ஆனால் எதிர்கட்சிகளும் இதில் அமைதி காக்கின்றன, ஒரு சத்தமும் இல்லை, அதனால் விஜயபாஸ்கர் செட்டியார் பெரும் அரசனின் வம்சாவளி, நேரம் போகாமல் அரசியலுக்கு வந்தவர் என நம்பிகொள்வோம் […]

முட்டை ஊழலை அம்பலப்படுத்தினார் கமலஹாசன்

20 ஆண்டுகள் ஆடிய சிறந்த இந்திய வீரர்கள் சாதிக்காததை, கோலி தலைமையில் சாதிக்கிறோம்: ரவி சாஸ்திரி அதாவது கொழும்பில் இலங்கை அணியினை டெஸ்டில் வென்றுவிட்டார்களாம், எந்த இலங்கை அணி? சமீபகாலமாக அடிக்குமேல் அடிவாங்கி, கத்துகுட்டி ஜிம்பாப்வேயிடம் அடிவாங்கியிருக்கும் இலங்கை அணி ஏதோ ஆஸ்திரேலியாவினை வென்றுவிட்டது போல ஒரு ஆர்ப்பாட்டம். மிஸ்டர் சாஸ்திரி ஏன் இவ்வளவு தற்பெருமை? கோலியுடன் சேர்ந்தபின் வந்த தோஷமா? இந்த அணியினை விட மிகபெரும் சாதனையான அணி எது தெரியுமா சாஸ்திரி ? மகளிர் […]

எங்கிருந்துதான் யோசிப்பார்களோ தெரியவில்லை

எங்கிருந்துதான் யோசிப்பார்களோ தெரியவில்லை, கற்பனை கதைகளை படைப்பதில் இவர்கள் கல்கியையும், வர்ணிப்பதில் கம்பனையும் நினைவுபடுத்திகொண்டே இருக்கின்றார்கள். அதாவது காமராஜர் குடிநீர்டேங்க் கட்ட சென்றாராம், இன்சினியர் இது டெக்கினிக்கலாக முடியாது என மல்லாக்க படுத்துவிட்டாரம், கோபமடைந்த காமராசர் “முடியாதுண்ணு சொல்லவா நீ படிச்ச” என சொல்லி நெஞ்சிலே மிதிச்சாராம், 4 மிதியாம். உடனே அந்த‌ இஞ்சினியர் அண்ணாமலை ரஜினியாக எழும்பி, லிங்கா ரஜினியாக கட்டி முடித்தாராம், உடனே பாகுபலி ரம்யாகிருஷ்ணனாக காமராஜர் வெற்றிபுன்னகை புரிந்தாராம். இதுவரை சிக்கல் இல்லை, […]

இந்திய போராட்டங்களும் வழக்கறிஞர்களும் பிரிக்கமுடியாதவை

இந்திய போராட்டங்களும் வழக்கறிஞர்களும் பிரிக்கமுடியாதவை சுதந்திர போராட்டத்தில் வ.உ.சி , காந்தி, பட்டேல், ராஜாஜி என வழக்கறிஞர்கள் வரிசை மிக நீண்டது. சமூக போராட்டத்தில் பன்னீர்செல்வம், அம்பேத்கர் என பெரும் வரிசை உண்டு சுதந்திரத்திற்கு பின் இந்தியாவின் ஒவ்வொரு போராட்டத்திலும், குறிப்பாக தமிழகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் பெரும் மாற்றங்களை கொடுத்தது மொழிப்போர், மிசா, ஈழ ஆதரவு காலங்கள் என எல்லா போராட்டங்களிலும் வழக்கறிஞர்களின் போராட்டம் தீரமிக்கவை அவர்களின் தீரமிக்க போராட்டங்கள்தான் இந்நாட்டில் உரிமைகளை எல்லாம் பெற்று கொடுத்தன, […]

மெல்ல தமிழ் இனி சாகும்

மறுபடியும் ஒவியாவினை ஆதரிக்க தொடங்கி விட்டார் Omm Prakash, ஆனானபட்ட விசுவாமித்திரரே கவிழ்ந்த உலகில் பாவம் இந்த பந்துமித்திரர் என்ன செய்வார்? அதே அழிச்சாட்டியம் “நீ நடந்தால் நடை அழகு நீ சிரித்தால் சிரிப்பழகு” என ஓவியா படத்தின் முன்பு நின்று அவர் பாடுவதைகூட பொறுத்துகொள்ளலாம், அதற்கு அடுத்த வரியினைத்தான் பொறுக்க முடியவில்லை “நீ பேசும் தமிழ் அழகு” என அவர் ஓவியாபார்த்து சொல்லும்பொழுது தாங்கவே முடியவில்லை, பாரதிதான் நினைவுக்கு வருகின்றார் “மெல்ல தமிழ் இனி சாகும்” என […]

வெல்ல பிறந்தவன் : 05

அலெக்ஸாண்டருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அரண்மனை கலையிழந்தது, அலெக்ஸாண்டர் தாய் பாசத்த்தில் துடித்தான், ஆனால் தந்தையினை மதித்தான், அதுவும் தந்தை மாமன்னாக இருக்கும்பொழுது என்ன செய்ய? தந்தையோ மனோகரா படத்து புருஷோத்தமனாக இருந்தார், கிரேக்கத்து கிளியோபாட்ராவிடம் மயங்கி கிடந்தார், திருமண நாளும் நெருங்கிற்று (இது எகிப்து கிளியோபாட்ரா அல்ல, அவர் வேறு, அது அங்கு அரச குடும்பத்து சொல் , சில சமஸ்தானங்களில் நாச்சியார் என சொல்வார்கள் அல்லவா? அப்படி. பின்னாளில் எகிப்தில் கிரேக்கர் ஆளும்பொழுது […]

கொஞ்சம் இரக்கமுள்ள அரசுதான்

சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படாது, யாருக்கு மானியம் தேவையில்லை என பின்னர் அறிவிக்கபடும்: மத்திய அரசு அறிவிப்பு அது என்ன பின்னர் அறிவிக்கபடும்? யார் யாருக்கு ரேஷன் இல்லை என சொன்னார்களோ, அவர்களுக்கு மானியம் இல்லை அதாவது யாருக்குமே இல்லை என சொல்லபோகின்றார்கள் கொஞ்சம் இரக்கமுள்ள அரசுதான், அதனால் மக்களை விட்டு விட்டுத்தான் அடிப்பார்கள் மோடியின் ‘கார்ப்ரேட் அரசு’ எளிய மக்கள் மீது பொருளாதார தாக்குதலை நடத்தி வருகிறது: வைகோ கடும் கண்டனம் இவர்தான் மோடி கூட்டணியில் […]

ஜூலியினை பிக்பாஸில் போட்டு அடியோ அடி என அடிக்கின்றார்களாம்

 ஒரு சம்பவம் உண்டென்பார்கள் பாரதிராஜாவிற்கும், பெரியார் தாசனுக்கும் முன்பொருமுறை பிரச்சினை வெடித்தது. பாரதிராஜா நாயக்கர்களை விரட்டுவோம் எனும் தமிழ்தேசியவாதி, பெரியார்தாசன் இஸ்லாமை தமுவும் முன் தீவிர பெரியாரிஸ்ட், பெயரே அப்படி என்றால் பார்த்துகொள்ளுங்கள் எங்கோ பாரதிராஜாவினை அவர் ஏதோ சொல்லபோக, பாரதிராஜாவின் அடிப்பொடிகள் வந்து சீறின, அப்பே உங்கள அவமானமா பேசிட்டாரு அப்பே, வந்து அவர நாலு அடி அடிங்க அப்பே” என்ற அளவு கண்ணை கசக்கினார்கள் பாரதிராஜா சில நாட்களாக அமைதிகாத்தார், ஒரு நாள் நேராக […]

குஷ்பூ வாழ்க என சொன்னால்தான் அலெக்ஸாண்டர் வருவான்

அலெக்ஸாண்டர் கதையின் அடுத்த பாகத்தை பலர் கேட்கின்றார்கள் குஷ்பூ தொடரை நீங்கள் படிக்காததால் , அந்த அலக்ஸாண்டர் என்ன ஆனால் என்ன? அவன் குதிரை செத்தால் என்ன? டேரியஸ் எங்கு ஓடினால் என்ன? போரஸ் எந்த யானைகாலில் மிதிபட்டால் எங்களுக்கு என்ன? குஷ்பூ வாழ்க என சொன்னால்தான் அலெக்ஸாண்டர் வருவான், இல்லாவிட்டால் அவனை அந்த கருப்பு குதிரையோடு விரட்டிவிடலாம்  

பேசாமல் பேசவைக்கின்றார் கலைஞர்..

இதனை எங்கள் அண்ணன் திருட்டு முருகன் சொன்னார், அங்கிள் சைமன் சொன்னார் , அவர்கள் சொன்னபடி ரேஷன் கடையினை மத்திய அரசு மூடுகின்றது என்றெல்லாம் சில குஞ்சுகள் கீச்சிடுகின்றன‌ அதாவது திருமுருகனும், சீமானும் மக்கள் போராளிகளாம், பெரும் அறிவாளிகளாம், ஏன் என்றால் கத்திவிட்டார்களாம். ஏண்டா டேய், இவர்களை எல்லாம் பெரிய … என‌ சொல்வீர்கள் என்றால், 1969லே மத்திய அரசின் மானியத்தை நம்ப முடியாது, ரேஷன் கடைகளை நடத்த மதுகடைகள் உட்பட சில முன்னேற்பாடு அவசியம் என […]