பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

துணை ஜனாதிபதியாகிறார் வெங்கையா நாயுடு

துணை ஜனாதிபதியாகிறார் வெங்கையா நாயுடு இப்போது மனம் வெறுத்து திரியும் ஒரு நபர் யாரென்றால் தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசுதான் அந்த பாஜகவிலே இருந்திருந்தால் நிச்சயம் நல்லவாய்ப்பினை பெற்றிருக்கலாம் , இப்பொழுது காங்கிரசில் வந்து சிக்கிகொண்டார், விதி வலியது என்பது இதுதான் துணை ஜனாதிபதியான பின்பாவது “அதிமுக அரசினை கலைக்கமாட்டோம்” போன்ற கருத்துக்களை அவர் பழக்க தோஷத்தில் பேசாமல் வெங்கய்யா நாயுடு நிறுத்தட்டும். பதவிக்கு ஒரு பொறுப்பு உண்டல்லவா? தமிழகத்துக்கு தண்ணீர் தர மழை பெய்விக்க […]

பிக் பாஸ்… குத்துங்க எசமான் குத்துங்க…

பிக்பாஸில் சிநேகன் என்பவரை மனிதர் கணக்கில் எடுக்க முடியாது, ஏலியன்ஸ் அல்லது பிதாமகன் வகையறா அவர். பாலா படங்களுக்கு பொருத்தமானவர் அவ்வளவுதான் மற்ற ஆண்களை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை, அலப்பறை கஞ்சா கருப்பு வெளியேறிய பின் அந்த பக்கம் எல்லாம் அமைதி ஆனால் இந்த பெண்கள் அணி இருக்கிறதல்லவா? , நடிப்பென்றால் அப்படி ஒரு நடிப்பு. அப்படி ஒரு பச்சோந்திதனம். தனிதனியே சந்திக்கும் பொழுது மற்றவளை திட்டுகின்றார்கள், கரித்துகொட்டுகின்றார்கள். ஆனால் நேரில் பார்க்கும்பொழுது பாசமோ, ஆலோசனையோ அதில் […]

ஓவியாவிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு

ஓவியாவிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு அதிபயங்கரமாக இருக்கின்றது, காயத்திரியினை பிடித்து இனி கூவம் கரையில் கட்டிவைத்துவிடுவார்கள் போல‌ அந்த ஆர்த்தி இனி அந்த விருமாண்டி கெட்டப்பிலே அலைவதுதான் அவருக்கு பாதுகாப்பு இந்த ஜூலியும் வாயினை வைத்துகொண்டு சும்மா இருப்பது நல்லது, ஏதாவது அவர் ஓவியாவினை சீண்டிவிட்டால் படைகள் புகுந்து ஜூலியினை பிடித்து ஜல்லிகட்டு காளை கொம்பிலோ காலிலோ கட்டிவிடும் அளவிற்கு ஓவியா பாறைகள் ஆர்ப்பரிக்கின்றன‌ கமலஹாசனுக்கும் சிக்கல்தான், அடுத்தபடத்தில் அவர் ஓவியாவினை ஹீரோயின் ஆக்கும் கட்டாயம் வந்தாலும் வரலாம். […]

கர்நாடகா சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா பணியிட மாற்றம்!

கர்நாடகா சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா பணியிட மாற்றம்! அன்றே சொன்னதுதான், சித்தராமையா நாடகம் ஆடுகின்றார், சசிகலா தரப்பிற்கு காங்கிரஸின் ஆதரவின்றி இது சாத்தியமில்லை நீதிபதி குன்ஹா தலமையில் விசாரணை நடக்காமல் உண்மை வெளிவராது உண்மை வருகின்றதோ இல்லையோ, இப்பொழுது வந்திருக்கவேண்டிய காவேரி வரவில்லை. அணை கதவுகளை இறுக்கிவிட்டது கர்நாடகா. சிறையில் சசிகலாவிற்கு வசதிகள் பெருக பெருக, காவேரியினை திற எனும் எடப்பாடி அரசுக்கு வாய்பூட்டு போட்டாயிற்று, எங்கோ எழுதபடாத ஒப்பந்தம் துண்டைபோட்டு விரலை பிடித்து நடந்திருக்கலாம், சசிகலாவிற்கு […]

சத்யராஜின் மகள் மோடிக்கு கடிதம்

சத்யராஜின் மகள் மோடிக்கு கடிதம் கொஞ்ச நாளாகவே அவருக்கு மிரட்டல் வருவது செய்திகள், இதனையும் இன்னும் சில காரியங்களுக்காகவும் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கின்றார் அவர் சத்தியராஜ் ஒரு இனமான பச்சை தமிழர், தமிழரை தமிழரே ஆளவேண்டும் என்ற முழக்கம் கொண்டவர் இப்பொழுது எழும் கேள்வி என்ன? பச்சை தமிழன் எடப்பாடி கல்லுமாதிரி தில்லாக கோட்டையில் இருக்கும்பொழுது, இந்தபெண் தமிழ் முதல்வருக்கு கடிதம் எழுதாமல் ஒரு குஜராத்தியரான மோடிக்கு ஏன் கடிதம் எழுதவேண்டும்? பச்சை தமிழன் ஆட்சியில் ஒரு […]

ஓளவையாருக்கு கவர்னர் மாளிகையில் சிலை

ஓளவையாருக்கு கவர்னர் மாளிகையில் சிலை அதியமானை பல மன்னர்கள் அடிக்க கிளம்பும்பொழுது ஓளவையார்தான் தூது சென்று காத்தாராம், அப்படி இந்த வீக்பாடி அரசினை இன்னும் விட்டுவைத்திருக்கும் கவர்ணர் மாளிகையில் அவ்வையாரின் சிலையினை சரியான நேரத்தில் வைத்திருக்கலாம் அதனை விட இன்னொரு கோணம் முக்கியமானது “குடி உயர கோன் உயரும்” என சொன்னவர் அல்லவா? குடியில்தானே தமிழக அரசு ஓடிகொண்டிருக்கின்றது, அவ்வையார் மக்கள் என சொன்ன குடியினை, இவர்கள் டாஸ்மாக் குடியாக எண்ணி, “அன்றே சொன்னார் அவ்வை” என […]

கமலுக்கு ஆதரவாக குஷ்பூவின் குரல்

கமலஹாசனை அரசு வம்புக்கு இழுக்கின்றது, எந்த நடிகனும் சத்தமே இல்லை, முன்னாள் எதிர்கட்சி தலைவரான விஜயகாந்தின் “சேரை தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க” “த்த்தூ” போன்ற முத்திரைகளையும் காணவில்லை கமலுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் குரல் வரும் நிலையில் சினிமாக்காரர்கள் குரல் வரவில்லை, வரவும் வராது ஆனால் ஒரே ஒரு குரல் மிக தைரியமாக ஒலிக்கும், விரைவில் ஒலிக்கும் அது குஷ்பூவின் குரல் என்று சொல்ல தேவையில்லை, அவரை தவிர அவ்வளவு தைரியம் யாருக்கும் சாத்தியமில்லை Iron Lady […]

அடால்ப் ஈச்மென் Vs மொசாத் : 02

நிச்சயமாக உலகத்தையே நாம் தான் ஆளப்போகின்றோம், அதில் யூதர்களை எந்த நாட்டிற்கு அனுப்புவது? எல்லாமே நம்நாடு அதனால் அவர்களை உலகத்திலிருந்தே அப்புறபடுத்துவதுதான் சரி என்ற நம்பிக்கையில் கொலைவெறியாட்டம் ஆடிய ஈச்மென் இப்பொழுது அடங்கி கிடந்தார். இது அவர் எதிர்பார்க்காத தோல்வி, அதனைவிட எதிர்பாராதது இஸ்ரேல் அமைந்ததும் மொசாத் அமைக்கபட்டதும் இனி இத்தாலியில் இருப்பது சரியானதல்ல என உணர்ந்த ஈச்மென் தப்பி செல்ல திட்டமிட்டார். ஜெனிவாவில் கூடிய நாடுகள்வேறு ஜெர்மன் அகதிகளுக்கு சில சலுகைகளை அறிவித்திருந்தன. அடையாள ஆவணம் […]

கமலஹாசனுக்கு ஆதரவு பெருகுகின்றது

கமலஹாசன் அவர் சார்ந்த துறையினை முதலில் கவனிக்கட்டும் : தமிழிசை ஏதோ தமிழிசையினை கமலஹாசனின் அடுத்தபடத்தில் ஹீரோயினாக நடிக்க அழைத்ததுபோல் அம்மணி அலுத்துகொள்கின்றார். ஏம்மா தமிழிசை, இந்த ரஜினி என்றால் மட்டும் வரவேற்போம் என்கின்றீர்கள், கமல் என்றால் மட்டும் அவர் வேலையினை பார்க்கட்டும் என்கின்றீர்கள். ஏன் இந்த பாகுபாடு? ரஜினி பிரச்சினையில்லை, ஆனால் கமல் மோடியினை விட சிறப்பாக நடித்துவிடுவார் என்ற பயமா? கமல் எதாவுது விளம்பரம் தேடுவதற்காக எங்களைப் பற்றி குறை சொல்லலாம்: செல்லூர் ராஜூ […]

விருது வழங்காதது அரசியல் இருட்டடிப்பு: பா. விஜய் சீற்றம்

எனக்கும் வைரமுத்துவுக்கும் ஒரு விருதும் வழங்காதது அரசியல் இருட்டடிப்பு: பா. விஜய் சீற்றம் இது என்ன அட்டகாசம்? அப்படியானால் முன்பு இவர் விருது வாங்கியதெல்லாம் அரசியல் வெளிச்சமா? வைரமுத்து தன்னை இன்றும் நிரூபிக்கின்றார், தேசிய விருதுகளை வாங்கி குவிக்கின்றார், திறமைக்கு தடை இல்லை இன்று நா.முத்துகுமார் இல்லை , அவர்தான் மூன்றுவருடத்திற்கான கவிஞர் விருது அவருக்குத்தான் கொடுக்கபட்டிருக்கின்றது உண்மையில் கலைஞருடன் பழகுகின்றேன், அவர் கதை வசனத்தில் நடிக்கபோகின்றேன் என திசைமாறியவர் இவர்தான், அதன்பின்புதான் இவரின் பாடல்கள் சுரமற்றுபோயின‌. […]