பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கதிராமங்கலம் ,நெடுவாசல் மக்களை பார்க்கும்பொழுது கண்ணீர்தான் வருகின்றது

அந்த கதிராமங்கலம் ,நெடுவாசல் மக்களை பார்க்கும்பொழுது கண்ணீர்தான் வருகின்றது கண்முன்னால் சொந்த மண் அழிக்கபடும் பொழுதும், வாழ்வாதரம் சிதைக்கபடும்பொழுதும் மனதால் செத்துத்தான் போவோம், அவர்கள் அப்படி செத்துகொண்டிருக்கின்றார்கள் ஆனால் தமிழகம் எப்படி இருக்கின்றது என்றால் அப்படியேதான் இருக்கின்றது இரு காரணங்கள் தான், ஒன்று நமக்கு நேராதவரை அடுத்தவரின் வலி நமக்கு தெரியாது இன்னொன்று தமிழர்களை ஒருங்கிணைத்து செல்ல நல்ல தலைவர்கள் இல்லை நன்றாக கவனித்தால் புரியும், ராமேஸ்வரம் மீணவர் பிரச்சினையா? அது அவர்கள் பாடு, ஏன் எல்லை […]

ஜிஎஸ்டி அலப்பறைகள் இன்னும் ஓயவில்லை

ஜிஎஸ்டி அலப்பறைகள் இன்னும் ஓயவில்லை, என்னவோ அதற்கு முன்பு வரியே இல்லாதது போலவும், புதிதாக வரி வந்தது போலவும் சொல்லிகொண்டிருக்கின்றார்கள் உணவங்களில் முன்பு சேவை வரி, அந்த வரி இந்தவரி என நிறைய இருக்கும், எல்லா பில்களிலும் இருக்கும் அதனை எல்லாம் எவனும் படமெடுத்து போட்டு கொண்டிருக்கவில்லை. உப்பு முதல் தங்கம் வரை எந்நாளும் வரி இருந்தது, வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் வரி உண்டு. வரியே இல்லாத தேசமாக இது என்றிருந்தது? மன்னர் காலம் முதல் வெள்ளையர் […]

சுவாமி விவேகானந்தர்

இந்தியா ஏராளமான சிந்தனையாளர்களை கொடுத்திருக்கின்றது, விஞ்ஞானிகள், கவிஞர்கள், நாட்டுபற்றாளார்கள் என அந்த கொடை பெரிது அவ்வாறே அம்மண்ணில் உதித்த ஞான சூரியன்களில் மிக மிக முக்கியமானவர் விவேகானந்தர். சிறுவயதிலே ஏராளமான கேள்விகளை எழுப்பியவர், ஆன்மீகத்தையும் பகுத்தறிவினால் உணரமுற்பட்டவர், அக்கால பெரும் பீடமான பிரம்ம சமாஜம் அவரை எதிர்கொள்ளமுடியவில்லை, இறுதியில் ராமகிருஷ்ண பரம்மஹம்சரிடம் தான் தேடிய ஆத்மஞானத்தினை அடைய அடைக்கலமானார். தெளிவான முகம், குழப்பமில்லாத பதில்கள், தெளிந்த நீரோடை போன்ற பேச்சு, எதிர்கேள்வி கேட்கமுடியாத அற்புதமான உவமைகள், உள்ளத்தில் […]

இஸ்ரேல் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி…

இன்று இஸ்ரேல் செல்கின்றார் மோடி, அங்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் அவர்தான் இஸ்ரேல் என்பது முக்கியமான நாடு என்றாகிற்று மறுப்பதற்கில்லை ஆனால் அதனை கையாள்வது என்பது மகா சிக்கலான ஒன்று இஸ்ரேல் என்ற நாடு 1948ல் உருவாக்கபட்டாலும் நெடுநாள் இந்தியா அதனை அங்கீகரிக்கவில்லை, அது பாலஸ்தீன் பக்கமே இருந்தது, ராஜிவ் காலம் வரை அப்படித்தான் இந்திய நிலைப்பாடு பல்வேறு காரணங்கள் அதற்கு உண்டு, இஸ்ரேல் நிச்சயமாக அமெரிக்காவின் இன்னொரு முகம், இந்திய வளர்ச்சியினை அமெரிக்கா ஒருபோதும் […]

அரிசி பற்றி சொன்னால் கூட பொங்குகின்றார்கள்

அரிசி பற்றி சொன்னால் உடனே மன்னார்குடி, திருவாரூர்க்காரகள் எல்லாம் பொங்குகின்றார்கள் அரிசி பற்றி உனக்கு என்ன தெரியும் என கடுமையான சத்தம், அரிசி பற்றி அவர்களுக்கு மட்டும்தான் தெரியுமாம் அரிசி என்பது ஜப்பான் முதல் இந்தியா வரை விளையும், ஆப்ரிக்காவில் கூட உண்டு, தமிழகத்தில் அரிசி பிற்காலத்தில்தான் வந்தது என்கின்றார்கள் சம்பா என்பது வியட்நாமில் இன்றும் உள்ள ஊர், நல்ல அரிசிக்கு அதுதான் பிரசித்தம் அங்கிருந்துதான் நெல் தமிழகத்திற்கு பரவிற்று, விதை அங்கிருந்துதான் வந்தது என்பது ஒரு […]

ஒவ்வொரு வகை அரிசிக்கும் ஒவ்வொரு குழம்புதான் பொருத்தம், அதுதான் அதிருசி

ஒவ்வொரு வகை அரிசிக்கும் ஒவ்வொரு குழம்புதான் பொருத்தம், அதுதான் அதிருசி இன்றோ ஒரே வகை அரிசிக்கு எல்லா வகை குழம்புகளையும் பொருத்தமில்லாமல் ஊற்றி உண்கின்றோம் நீண்ட ஆராய்ச்சிக்கு பின் இந்த ஞானம் எனக்கு கிடைத்துவிட்டது ஒவ்வொரு வகை குழம்பிற்கும் ஒவ்வொரு வகை அரிசி சோறுதான் பெரும் சுவையினை கொடுக்கின்றது, இந்த பொருத்தம் மிக முக்கியம் பொன்னி அரிசிக்கு வத்த குழம்பு, சம்பா அரிசிக்கு மீன் குழம்பு, புழுங்கல் அரிசிக்கு சாம்பார்,ரசம், சீரக சம்பா அரிசிக்கு கத்தரிக்காய், பாசுமதி […]

ஜிஎஸ்டி வரியினை அதிகமாக விதித்து மக்களை கொடுமைபடுத்துகின்றனர் : சீமான்

ஜிஎஸ்டி வரியினை அதிகமாக விதித்து மக்களை கொடுமைபடுத்துகின்றனர் : சீமான் அங்கிள் சைமன் உங்கள் அண்ணன் பிரபாகரன் ஈழ மக்களை வரியில் பிழிந்ததை விடவா இந்தியா வரி சுமத்திற்று? ஓமந்தை சாவடியில் வன்னி மக்கள் செலுத்திய வரி என்ன? வாகன வரி, நுழைவு வரி, பொருள் வரி, யுத்த வரி என எத்தனை வரிகளை புலிகள் சுமத்தினார்கள்? சிங்களன் பகுதியில் 50 ரூபாய்க்கு கிடைத்தபொருள் புலிகள் பகுதியின் வரிகொடுமையால் 150 ரூபாய்க்கு விற்ற கொடுமை எல்லாம் நடந்த […]

யார் இந்த யாசின் மாலிக்?

காஷ்மீரில் ஒரு தலைமறைவு தீவிரவாதி , அதுவும் மிக கொடிய தீவிரவாதி, அவன் தலைக்கு பல லட்சம் பரிசு என சொன்ன தீவிரவாதி நமது பாதுகாப்பு படையினரால் கொல்லபட்டிருக்கின்றான் அவன் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட யாசின் மாலிக், அதனை கண்டித்து முழு அடைப்பு நடத்த போவதாக சொல்லிகொண்டிருக்கின்றான், ஏதும் நடந்தால் அவனையும் பிடித்து உள்ளே போட அரசு தயாராகின்றது யார் இந்த யாசின் மாலிக்? காஷ்மீர் பிரிவினை வாத தலைவன், தமிழகத்தில் இவனை அழைத்து வந்து […]

விம்பிள்டனில் ஜீவன் நெடுஞ்செழியன் மற்றும் பெரியாரின் கைத்தடிக்கு வேலை வந்துவிட்டது : கீ.வீரமணி

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதன்மையானது விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் அதில் அக்கால‌ அமிர்தராஜ் போன்ற சில‌ தமிழர்கள் முன்பு பங்கெடுத்தார்கள், அந்த வரிசையில் கலந்து கொள்ள போகின்றார் ஜீவன் நெடுஞ்செழியன் திராவிட ஆட்சி என்ன செய்தது என கேட்பவர்கள் எல்லாம் காதை கொண்டுவாருங்கள் திருகி சொல்கின்றோம், இதோ ஒரு தமிழன் விம்பிள்டன் விளையாடும் அளவு உருவாக்கிவிட்டார்கள் இந்த திராவிட தமிழன் எப்படி விம்பிள்டன் விளையாட செல்கின்றான் என்றால், இவரின் தாத்தா நெடுஞ்செழியன் ஊட்டிய திராவிட உணர்வு அப்படி ஆம் […]

நிர்மலா சீத்தாராமன் பேச்சில் கடுமை இருக்கலாம் ….

அந்த நிர்மலா சீத்தாராமன் பேச்சில் கடுமை இருக்கலாம், வீட்டிலே சாப்பிட்டால் என்ன என்ற வரிகளில் அபத்தம் இருக்கலாம் அதற்காக அவர் ஆணவம் பிடித்தர், திமிர் பிடித்தவர் என்பதெல்லாம் சொல்ல கூடாத குற்றசாட்டுகள். அரசியலுக்கு ஒரு பெண் வரும்பொழுது இயல்பான அச்சத்தை மறைக்க கொஞ்சம் தைரியமாக பேச முயற்சிப்பார்கள் நிர்மலா சீத்தாராமன் அதனை செய்யலாம், சில தடுமாற்றங்களை மறைக்க அதித துணிவோடு காட்டிகொள்ளலாம் அதற்காக அவர் ஆணவம் பிடித்தவர், பார்பணீய திமிர் என்பதெல்லாம் சரியல்ல‌ ஜெயா என்றொருவர் இருந்தார், […]