பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காயிதே மில்லத்

சுதந்திரத்திற்கு போராடிய பல தலைவர்களை நெல்லை கொடுத்தது, பல அற்புதமான சிந்தனையாளர்களை, தலைவர்களை நெல்லை கொடுத்தது அவர்களில் ஒருவர்தான் காயிதே மில்லத், இயற்பெயர் இஸ்மாயில், உருது சொல்லில் வழிகாட்டி என பொருள்படும் காயிதே மில்லத் எனும் பெயரில் அழைக்கபட்டார் காந்தியின் ஒத்துழையாமை இயக்கம்தான் அவரின் அரசியல் வாழ்வின் தொடக்கம், பின்பு ஜின்னாவின் கட்சியில் இருந்தார், இஸ்லாமிய உரிமைகளை காக்கும் குரலைத்தான் எழுப்பினார், ஆனால் ஜின்னா பாகிஸ்தான் கேட்கும் பொழுது காயிதே மில்லத்தின் எண்ணத்தில் மாறுதல் ஏற்பட்டது ஜின்னாவின் […]

உண்மைகள் உறங்குவதுமில்லை, பொன்.சிவகுமாரன் மறைவதுமில்லை.

அது 1974ம் ஆண்டு, தமிழர்களை சிங்கள அரசுகள் ஒடுக்க ஆரம்பித்த நேரம். வஞ்சகமாக இந்திய மலையக வம்சாவழிதமிழரில் பெரும்பான்மையினரை இந்தியாவிற்கு அனுப்பிவிட்டு (அப்பொழுது ஒரு ஈழதமிழரும் அதனை கண்டிக்கவில்லை,எதிர்க்கவில்லை என்பதுவேறுகதை ) ஈழதமிழரை குறிவைத்து காய்களை நகர்த்தியது. இறுதியாக ஒரு திட்டத்தினை கொண்டுவந்தது. அது சிறிமாவோ பண்டாரநாயக, ஒரு யானைகுட்டியை கொடுத்து கச்சதீவை வாங்கியர் (அதாவது கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கபட்டபொழுது இந்திராவுக்கு இவர் ஒரு யானைகுட்டி பரிசளித்தார்) என சிங்களர்களால் கொண்டாடபட்ட சிறீமாவோ ஒரு கடும் கட்டுப்பாடு […]

இந்திய பாரம்பரிய அழகு, சீன பாரம்பரிய உடையில் மிளிரும் காட்சி

இந்திய பாரம்பரிய அழகு, சீன பாரம்பரிய உடையில் மிளிரும் காட்சி இதனை கண்டபின்னும் இனி சீனா இந்தியாவோடு யுத்தத்திற்கு வரும் வராது, இந்திய சீனா “பாய் பாய்” , இந்தியாவும் சீனாவும் சகோதரரர்கள் என என்றோ நேரு சொன்னதை சீனர்கள் உணரும் தருணம் இது வரலாற்றில் சமாதனா புறாக்கள் உண்டு, முதன் முறையாக “சமாதான மயில்” உலகிற்கு கிடைத்திருக்கின்றது, அப்படி குஷ்பூ சமாதன மயிலாக சீனா சென்றிருக்கின்றார்.   இந்த படம், இந்தியா- சீனா இடையே புதிய […]

ஒரு கட்சி விழா என்றால் சில அரசியல்வாதிகள் வரத்தான் செய்வார்கள்….

இதென்ன பிரமாதம், ஒரு கட்சி விழா என்றால் சில அரசியல்வாதிகள் வரத்தான் செய்வார்கள், ஸ்டாலினை சந்திக்க பல பெரும் தலைவர்கள் வந்ததில் என்ன ஆச்சரியம்? என சிலர் சொல்லி தமக்கு தாமே ஆறுதல் சொல்கின்றார்கள் இதெல்லாம் ஆற்றமையிலும் ஒரு வித தாங்கமுடியா வலியாலும் சொல்லிகொள்ளும் விஷயங்கள் இப்படி சொல்பவர்களுக்கு நாம் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான், எங்கே, சசிகலாவும், தினகரனும் இப்படி ஒரு பல தலைவர்களை அழைத்து ஒரு பெரும் கூட்டம் நடத்திவிடட்டும் பார்க்கலாம், இவ்வளவிற்கும் அவர்கள் […]

ஞாயிறு சிதறல்கள்….

சென்னையில் தீ விபத்துக்கள் நடக்க தொடங்கிவிட்டன, ஆனால் குஷ்பூ அங்கு இல்லாததால் மன்றத்திற்கு கொஞ்சம் ஆறுதல் , , ஒரு வேளை குஷ்பூ இல்லா கோபத்தில் சென்னை எரியுமோ?? தெரியவில்லை ஆனால் சில தீவிரவாத தாக்குதல்கள் நடந்துகொண்டிருக்கும் வேளை இது, குஷ்பூ வேறு வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார் அதனால் நாங்கள் சீனாவிற்கு கோரிக்கை விடுக்கின்றோம், “ஏய் சீனமே அந்த பட்டுசிலையினை பத்திரமாக அனுப்பி வை” என சங்க நாதம் எழுப்புகின்றோம் “எங்கள் மூச்சும், எங்கள் மகிழ்வும் மங்கா குஷ்பென்று […]

ஜி.வி பிரகாஷை வைத்து “கோபம்” எனும் படத்தினை இயக்குகின்றார் சீமான்

ஜி.வி பிரகாஷை வைத்து “கோபம்” எனும் படத்தினை இயக்குகின்றார் சீமான் ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிட்டார் சீமான், படத்தின் பெயர் ஏன் “கோபம்” என்று சிலர் சீண்ட கேட்டால், இந்த அரசு மீது, சமுதாயத்தின் மீது இருக்கும் கோபம் என அன்னார் வழக்கம் போல சீறுகின்றார் உண்மையில் சீமானுக்கு “கோபம்” தமிழக மக்கள் மீது, கரடியாக கத்தினாலும் கண்டுகொள்ளாத “கோபம்”, புலி கதை பேசி பெரும் பணம் சுருட்டும் திட்டம் தோல்வியுற்றதில் கோபம் அதுதான் உண்மையான “கோபம்”. ஆனாலும் […]

நான்கு முக புத்தனுக்கு விழாவாம்…

நமது ஊரில் முச்சந்தியில் பிள்ளையார் இருப்பது போல, இங்கு ஆங்காங்கு நாற்சந்திகள் நடுவே புத்தர் இருப்பார், அல்லது புத்தர் போல யாராவது இருப்பார்கள் உணவு உபசரிப்பில் மலேசியா நல்ல நாடு, விழாகாலங்களில் எங்காவது நாலு பேர் கூடி நின்று சாப்பிட்டு செல்லுங்கள் என அழைத்துகொண்டே இருப்பார்கள், சாப்பாடு எப்படி இருக்கும் என சொல்லமுடியாது, ஆனால் அந்த அன்பும், புன்னகை ஒழுகும் அந்த‌ அழைப்பும் பாரட்டபடவேண்டியது இன்றும் அழைத்தார்கள், 4 முக புத்தனுக்கு விழாவாம். அந்த சிலைக்கு மாலையிட்டு […]

தமிழருவி மணியன் , வைகோ, தினகரன்….

தமிழருவி மணியன் என்பவர் மீது பெரும் அபிமானம் இல்லை, வைகோவுடன் சேர்ந்து அவர் செய்த காமெடிகள் எல்லாம் எரிச்சல் ரகம் ஆனால் அவரின் புத்தகம் ஒன்று வாசிக்க முடிந்தது “மறக்க முடியாத மனிதர்கள்” என்ற அவரின் புத்தகம் அது. மனிதர் அற்புதமான எழுத்தாளர், பல அரசியல் சரித்திரங்களை மனதெல்லாம் நிரப்பி வைத்திருக்க்கின்றார் அரசியல் அவர்க்கு எதற்கு? அற்புதமான புத்தகங்களை எழுதி குவித்துகொண்டே இருக்கலாம் இந்த புத்தகம் கூட 12 புத்தகமாக வந்திருக்க வேண்டியது, மனிதரிடம் அவ்வளவு விஷயம் […]

கலைஞரின் 2009 உண்ணாவிரதம் சொன்னது என்ன?

சிலர் கலைஞரின் 2009 உண்ணாவிரதம் பற்றி சொல்லி கொண்டே இருக்கின்றான், அந்த பதர்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்றுதான் அடேய் பதர்களா, அறிவுள்ளவனின் ஒவ்வொரு செய்கைக்கும் ஆயிரம் அர்த்தம் உண்டு, கலைஞர் உண்ணாவிரதம் இருந்த அர்த்தம் என்ன தெரியுமா? “ஏய் சைத்தான் பிரபாகரனே, உன்னை இனி ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது, எத்தனையோ முறை உன்னை காத்தவர்களை எல்லாம் நீ கொன்றுத்தான் போட்டாய், இனி உன்னை காக்க யாருமில்லை நீ சாகத்தான் போகின்றாய், அந்த மக்களை விட்டுவிட்டு சாவு, என்னால் […]