பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திராவிட நாடு உருவாக வேண்டும் என சிலர் கொடி பிடிக்கின்றார்கள்

திராவிட நாடு என்ற பெயர் அடிபடும்பொழுது, இந்த கி.வீரமணியினை நினைத்தால்தான் பயமாக இருக்கின்றது ஒட்டுமொத்த காப்பி, பேட்டண்ட் ரைட்ஸ் என்னிடம்தான் இருக்கின்றது என விரைவில் வருவார் பாருங்கள் திராவிட நாடு உருவாக வேண்டும் என சிலர் கொடிபிடிக்கின்றார்களாம் அது முன்பு சொல்லபட்டு பின் இது நடக்காது என கைகழுவ பட்டு, அது கைவிடபட்டு பின் திமுக தேசிய ஜோதியில் கலந்தது இந்திராவின் மிசா காலத்திலே வராத அந்த கோரிக்கை, மோடி காலத்தில் வருவது ஆச்சரியம் மாட்டுகறி என்பது […]

கண்ணதாசன் பெரும் தீர்க்கதரிசி.. இன்னும் பிற….

கண்ணதாசன் பெரும் தீர்க்கதரிசி , வருங்காலத்தில் ஒருமாதிரியான இம்சை தமிழகத்தில் வரும் , அது குரைக்கும் என தெரிந்தே எழுதி வைத்த அழகான வரிகள் இதோ.. “முகத்தில் பாதி வாய் இருக்கும் முழு நீளம் நாக்கு இருக்கும் முதுகிலே கண் இருக்கும் மூளையிலே மண் இருக்கும் மனதிலே பேய் இருக்கும் மறையாத நோய் இருக்கும் வனத்திலே விட்டுவிட்டால் மிருகமெல்லாம் வரவேற்கும் வனத்திலே விடுவதற்கு வால் மட்டும் இல்லையடா….” இது யாருக்கு பொருந்தும் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை […]

ஆசான் பா ராகவனின் ருசியியல்…

ஆசான் Pa Raghavan ருசியியல் எனும் மிக மிக ரசனையான தொடரை எழுதுகின்றார், அதனை படித்த உடனே சொத்துக்களை விற்று அந்த உணவு கிடைகும் இடத்தை அடைய துடிக்கின்றது மனம் ஆனால் ஒரு வருத்தம் அவர் சைவ பட்சி, மாபெரும் கடலை படைத்து அதனை உப்பாக்கி வைத்த இறைவன், மாமன்னன் சாலமோனை யூதனாக குறுக்கிய இறைவன் இவரையும் சைவமாக்கிவிட்டான் இல்லையென்றால் நெத்திலி முதல் மாட்டுகறி வரை, புழு முதல் பாம்பு வரை அழகான சமையலை எல்லாம் உலகிற்கு […]

ஏன் தினமணி கண்டிக்கவில்லை?

தமிழக தினசரி பல உண்டு, அதில் நீண்ட பாரம்பரியும் தனி தன்மையும் கொண்டது தினமனி, இன்றும் அதன் தமிழும் கருத்துக்களும் தனித்துவமாக நிற்பவை தினதந்தி போன்றவை தமிழை கொலை செய்தன, சீமான் போன்ற பண்பாடில்லாத தமிழனைத்தான் கொடுத்தன‌, தமிழ் நாகரீகம், பேச்சு நாகரீகம், எழுத்து நாகரீகம் என தமிழருக்கிருந்த பல நல்ல விஷயங்களை கெடுத்தது அதாவது தாழகிடக்கும் தமிழரை மேலே எடுத்து சென்று நல்ல தரத்தில் நிறுத்த தவறி, அவர்கள் அளவிற்கு தமிழை இழுத்து சென்று அதன் […]

பாண்டே உங்களுக்கு தம்பி, மற்ற எல்லோரும் வந்தேறியா?

அங்கிள் சைமன் ரஜினி வந்தேறி, அவன் வந்தேறி என ஊரெல்லாம் ஒப்பாரி வைத்துவிட்டு, தந்திடிவி பாண்டே முன் அமர்ந்திருக்கின்றீர் பாண்டே பூர்வீகம் என்ன? எங்கிருந்து வந்தவர்கள் அவர்கள் பூர்வகுடியா? “என்றாவது தமிழன் என்னை கேள்வி கேட்கும் நீ வடக்கத்திய வந்தேறி, பாண்டே என்பது தமிழ்பெயரா? நீயா செந்தமிழனை கேள்வி கேட்பது” என சீறியிருக்கின்றீரா? பிழைக்க வந்தவன் என்னை கேள்விகேட்பதா? அமைதியாக வாழ்ந்துவிட்டு போ என கத்தியிருக்கின்றீரா? அவர் முன்னால் ஹிஹீஹிஹ்ஹி என ஈன் சிரிப்பு சிரித்துவிட்டு, வெளியே […]

மாட்டை மற, மனிதனை நினை….

“மாடு வெட்டி உண்போம் முடிந்தால் தடுத்துபார்” என கேரளம் உரிமை கீதம் பாட தொடங்கிற்று, அட்டகாசமாக எதிப்பினை கேரளம் கொடுக்கின்றது இவ்வளவிற்கும் மலையாளம் மலையாளிக்கே, மலையாள மாடு மலையாளிக்கே என சத்தமிடும் கூட்டம் எல்லாம் இல்லை , தேசிய கட்சிகள் தான் ஆனால் எது தன் உரிமை? எது தேசியம்? என்பதில் மிக கவனமாக இருக்கின்றது தனிநாடு கோரிக்கையினை கைவிட்ட திமுகவின் போராட்டமும் இந்த அடிப்படையில்தான் இருந்தது, இன்று அந்த சிங்கம் ஓய்ந்தபின் அப்படியான உறுமல்கள் இல்லை […]

ரஜினியினை பார்த்து பயப்படுவது யார்?

இந்த டூப்ளிகேட் தமிழ் இன உணவாளர்களை சொன்னால், சில முட்டாள் அப்பாவி மூடர்கள் வந்து, ஏய் நீ தமிழன் இல்லையா என பொங்குகின்றார்கள், மிரட்டுகின்றார்களாம் உண்மையில் ரஜினியினை பார்த்து பயப்படுவது யார் என்றால் அதிமுகவும் அதன் ஜால்ராக்களும், சும்மாவே அதிமுக கோட்டை கீறி கிடக்கின்றது, கதவினை உடைத்து பாஜக ஆடுகின்றது இதில் ரஜினி எனும் யானை கோட்டையினை இடித்துவிட்டால் என்னாகும்? உள்ள மானமும் பொகும். அதனால்தான் இந்த அதிமுக தன் ரகசிய வேட்டை நாய்களை குரைக்க‌ விட்டிருக்கின்றது […]

தமிழகத்தில் தனியார் பாலில் ரசாயாணம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழகத்தில் தனியார் பாலில் ரசாயாணம், விசாரணை முடிவில் நிரூபிக்கபட்டால் அது தடை செய்யபடும் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் என்ன நேற்று நள்ளிரவில் வந்ததா? இல்லை இவர்கள் இன்று காலைதான் அமைச்சர் பொறுப்பு ஏற்றார்களா? நல்ல அரசு என்றால் என்ன செய்திருக்க வேண்டும்?, விசாரணை முடிவு வரும் வரை இந்த பாலை தடை செய்கின்றோம் என சொல்ல வேண்டாமா? இது ஆபத்தான பால், ஆனால் முடிவு வரும் வரை குடியுங்கள் என எந்த முட்டாள் […]

வீரப்பன் படத்தினையும் மாட்டுவோம் : ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஜெய்லலிதா படத்தை சட்டசபையில் மாட்டினால், வீரப்பன் படத்தினையும் மாட்டுவோம் : ஈவிகேஎஸ் இளங்கோவன் மிஸ்டர் இளங்கோவன், என்ன பேசுகினறீர்கள், சும்மாவே அங்கிள் சைமன் வீரப்பன் படத்தை தூக்கிகொண்டு அலைகின்றார் நீர் இப்படி சொன்னால் இளங்கோவன் எங்களை ஆதரித்துவிட்டார், போராட்டம் மாபெரும் வெற்றி, புரட்சி வெற்றிஎன கிளம்பிவிடமாட்டாரா? அதனால் வேறு தலைசிறந்த கொலைகாரனை பற்றி சொல்லலாம், ஆட்டோ சங்கர், அட்டாக் பாண்டி, மணல்மேடு சங்கள், அயோத்தி குப்பம் வீரமணி போன்றோரை பரிசீலியுங்கள்.. கொசுறு ஆழி சூழ் உலகுதான், அப்படி […]

சிறியன சிந்தியாத நேரு

சிறியன சிந்தியாத நேரு அவர் பெரும் பணக்கார குடும்பத்தின் வாரிசு, உயர் கல்வியும், படோகரமான வாழ்வும் என அவர் வாழ்ந்த விதம் எந்த அரசனுக்கும் குறைவானதல்ல, ஆனால் ஜாலியன் வாலாபாக் படுகொலையும், காந்தியின் ஈர்ப்பும் அவரை போராட்ட களத்திற்கு இழுத்துவந்தன. 9 ஆண்டுகள் சிறைவாசம் ( காமாரஜர் நேரு போன்றவர்கள் எல்லாம் சிறையில் இருந்தவர்கள், யாரேனும் “பாம்புகள் பல்லிகள் நடுவினிலே” என பாடியிருப்பார்கள்), சொந்த பேரனை கூட முதல் முறையாக,சாலையோரத்தில் கூட்டத்தில் ஒருகைகுழந்தையாக காவல்துறை வேனில் இருந்து […]