பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மனுஷ்யபுத்திரனின் கண்ணீருக்கு ஆறுதல் கண்ணீர் வடிக்கும் ஜெயமோகன்

மனுஷ்யபுத்திரனின் கண்ணீருக்கு ஆறுதல் கண்ணீர் வடிக்கும் ஜெயமோகன் அவர் ஸ்டைலில் நிறைய புலம்பியிருக்கின்றார், இப்படி முடிக்கின்றார் “இஸ்லாமியர் பல நூறு ஆண்டுகளாக இங்கே ஈட்டிவைத்திருந்த நல்லெண்ணம் கடந்த இருபதாண்டுகளில் இங்குள்ள வஹாபியக் கும்பல்களால் அழிக்கப்பட்டுவிட்டது. துரதிருஷ்டவசமாக அவர்களே இஸ்லாமின் முகமாக பரவலாக அறியப்படுகிறார்கள். ஒவ்வொரு இந்துவும் அந்த பழைய இஸ்லாமியருக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறான். அதை இஸ்லாமியரில் சிலராவது உணரவேண்டும்.” மிஸ்டர் ஜெயமோகன் அதனை நாங்கள் திருப்பி கேட்கின்றோம் “திப்பு சுல்தான் காலத்தில் வெள்ளையானால் வளர்க்கபட்ட வெறி, தேசம் பிரிந்து, […]

எச்.ராசா என்பவர்தான் பெரும் உதாரணம்…. எதற்கு?

மதவெறி உச்சத்திற்கு போனால் எப்படி நடப்பார்கள் என்பதற்கு ஐஎஸ் இயக்கம் எடுத்துகாட்டு எப்படி பேசுவார்கள் என்பதற்கு எச்.ராசா என்பவர்தான் பெரும் உதாரணம். சோனியாகாந்தி பற்றி என்னவெல்லாமோ பேசிகொண்டிருக்கின்றார், அந்த பெண் ஏதாவது அரசு பதவியில் இருந்தவரா? நாட்டை ஆண்டவரா? மத சம்பந்தமான எந்த கருத்தினையாவது அவர் சொல்லியிருக்கின்றாரா? கடந்த ஆட்சியின்பொழுது விவசாயிகளுக்கான கடனை மன்மோகன்சிங் அரசு தள்ளுபடி செய்யும்பொழுது எந்த விவசாயி சோனியாவிடம் சென்று கத்தமுடியும்? அப்படி அறிவுகெட்டு கத்த அவர் என்ன எச்.ராசாவா? நொடிக்கொருமுறை சோனியா […]

ஒரு தேர்தல் நேரத்தில் தெறிக்கும் உண்மைகள்…

சசிகலா எழுதி கொடுத்த போலி அறிக்கையை படித்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம்: ஜெ.தீபா அட என்னய்யா இது? சசிகலாவினை ஜெயா சாவிற்கு பொறுப்பு, எனும் அளவிற்கு பன்னீர் செல்வம் கிழித்துகொண்டிருக்க, பன்னீரை தீபா கிழிக்க தொடங்கிவிட்டார் இன்னும் சுவாரஸ்ய உண்மைகள் வெளிவரலாம் சசிகலா பற்றிய உண்மைகளை பன்னீர் சொல்ல, பன்னீர் பற்றிய உண்மைகளை தீபா சொல்ல தொடங்கிவிட்டார் தீபா பற்றிய உண்மைகளை யார் சொல்வார்களோ? அதற்கும் ஒருவர் வராமலா போய்விடுவார், தீபாவின் கணவர் பேசாமலா போய்விடுவார்?? ஒரு தேர்தல் […]

திருமாவின் உண்மை முகம்…

“தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயரினால் தமிழ் மக்களுக்கு என்று எதுவித முன்னோடியான வேலைத்திட்டங்கள் எதனையும் முன்னெடுக்காத தொல் திருமாவளவன்.. தமிழின விடுதலை மீது பற்று வைத்துள்ளவர் என்று தமிழ் மக்களுக்கு காட்டிக்கொள்ளும் திரு தொல் திருமாவளவன், தமிழ் மக்களுக்கும் அன்றி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளுக்கும் எதுவித உதவிகளும் செய்ததில்லை. மேலும் திருமாவளவன் மக்களுக்கு நன்மை பயக்கும் வேலைத்திட்டங்களை முடக்கும் வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் அறிக்கைகள் விடுவதனையும், முற்றாக தவிர்க்கும் படியும் கேட்டுக்கொள்ளுகின்றோம் இத்தோடு திருமா […]

வள்ளியூர் சாலைகளில் ஆக்கிரமிப்பினை அகற்றுகின்றார்களாம்!

வள்ளியூர் சாலைகளில் ஆக்கிரமிப்பினை அகற்றுகின்றார்களாம், நல்ல செய்தி ஆனால் ஆக்கிரமிப்பு என்பது சாலை ஓரங்களில் மட்டுமல்ல, எல்லா தெருக்களிலும் இருக்கின்றது, கால்வாயில் இருக்கின்றது, பூங்கா அமைக்கவேண்டிய , மைதானம் வரவேண்டிய பொது இடங்களில் இருக்கின்றது, கோவில் நிலங்களிலும் இருக்கின்றது ஆக அவற்றை எல்லாம் விட்டுவிட்டு சாலை ஓர ஆக்கிரமிப்புகளை மட்டும் அகற்றுவோம் என்றால் அது உள்நோக்கம் கொண்டதும், மற்ற ஆக்கிரமிப்புகளை அங்கீகரித்ததும் போலாகிவிடும். இத்தோடு விட்டுவிடாமல், தெருக்கள், உட்சாலைகள் என‌ எல்லா ஆக்கிரமிப்புகளும் அகற்றபட்டால் நலம், அது […]

ஆர்.கே நகரில் திமுக வேட்பாளர்

ஆர்.கே நகரில் திமுக வேட்பாளர் நிறுத்தபட்ட விதம் குறித்து பல விவாதங்கள், அவர் புதுமுகம், பிரபலமில்லாதவர் எப்படி இந்த முக்கியமான தேர்தலில் வெற்றிபெறுவார், திமுக தேர்வு சரியில்லை என பல விமர்சனங்கள் திமுக என்றுமே வேட்பாளரின் தனிபலம் கொண்டு வெல்லும் கட்சி அல்ல‌ ஆனானபட்ட காமராஜரை வீழ்த்த, சீனிவாசன் எனும் மிக இளையவரைத்தான் நிறுத்தினார்கள். காமராஜரை வீழ்த்தியும் காட்டினார்கள் அது அன்று பெரும் ஆச்சரியமான விஷயம், காமராஜரை வெல்வது என்பது அன்று கனவிலும் நடக்காத விஷயம், ஆனால் […]

கமலஹாசனும் , ரஜினியும் கோழைகள் : சு.சாமி

கமலஹாசனும் , ரஜினியும் கோழைகள் : சு.சாமி ரஜினி பயந்தாங்கொள்ளி என இவர் சொல்வாரானால் மிக தாமதமாக உணர்ந்துகொண்டவர் என்றே பொருள். ஆனால் அந்த கோழை வீட்டுக்கு மாவீரன் மோடி , அதிரடி வீரன் அருண் ஜெட்லி, உட்பட எல்லா பாஜகவினரும் ஏன் செல்கின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை கமலஹாசனை இவர் ஏன் கோழை என்கின்றார்? ஒரு பிராமணன் பெரியார் கருத்துக்களை பேசினால் “அக்ரஹார” அகராதியில் கோழை என பெயர். மன்சாட்சிக்கு அஞ்சுபவன் கோழையாம்.. சரி ரஜினியும், கமலஹாசனும் […]

கலைஞரின் பேரன்கள் எப்படி படமெடுக்கலாம்?

கலைஞரின் பேரன்கள் எப்படி படமெடுக்கலாம்? அவர்களிடம் அவ்வளவு பணம் எப்படி என பலர் சாடுகின்றார்கள் அதாவது அது ஊழல்பணமாம், கண்டுபிடித்துவிட்டார்களாம் ஏவிஎம் செட்டியார் கொடிகட்டிபறந்த காலத்திலே மேகலா பிக்சர்ஸ், பூம்புகார் புரடக்சன் என சினிமா தயாரிப்பு கம்பெனி நடத்தியவர் அவர்கள் தாத்தா கலைஞர் அன்றே கார் வைத்திருந்த ஒரே எழுத்தாளர், வசனகர்த்த்தா அவர்தான் சிவாஜியும், எம்ஜிஆரும் வாய்ப்புக்கு அலைந்த காலங்களிலேயே கலைஞர் நிலையான இடம்பிடித்து எங்கோ போயிருந்தார்.. அவர் சம்பாதித்தது ஏராளம் அவரின் பேரன்கள் வந்து சினிமா […]

நடிகர்களை கூத்தாடிகள் என சொல்வதற்கு நடிகை ஸ்ரீரிபிரியா கண்டனம்

திரையுலக நடிகர்களை கூத்தாடிகள் என சொல்வதற்கு நடிகை ஸ்ரீரிபிரியா கண்டனம் கூத்து கட்டுபவனை பின் எப்படி அழைப்பார்கள் அம்மணி? விஞ்ஞானி, மேதை, அறிஞன், சிந்தனையாளன் என்றா அழைக்க முடியும்? கூத்தாடி என்றுதான் அழைக்கமுடியும் கூத்து கட்டுபவன் தான் நடிகன், அதனால் அவன் கூத்தாடி என சொல்லியது எம்.ஆர் ராதா, அவர்தான் அப்படி அழைக்கவே சொன்னார் அதாவது அம்மணி, நடிப்பவர்களை, வேஷ‌க்காரன் என சொல்லலாம், முகசாயம் பூசுபவன் என சொல்லலாம், நாங்கள் சொல்வது போல கூத்தாடி எனவும் சொல்லலாம்.. […]

மனுஷ்ய புத்திரன் வீடு தேடுகின்றாராம்…

மனுஷ்ய புத்திரன் வீடு தேடுகின்றாராம், அவருக்கு வீடு கொடுக்க ஒப்புகொண்டவர்கள் எல்லாம் அவர் இஸ்லாம் என தெரிந்தபின் மறுத்துவிடுகின்றார்களாம் இப்படி வழக்கமான தன் 1 கிலோ மீட்டர் ஸ்டைலில் அழுதிருக்கின்றார், நான் இஸ்லாமியன் என்பதால் வீடு கிடைக்கவில்லை என சொன்னால் விஷயம் முடிந்துவிடும், அதற்கு 10 பக்கம் இழுப்பு விஷயம் என்னவென்றால், தன் சொந்த பெயரான சாகுல் ஹமீதினை மறைத்து, மனுஷ்யபுத்திரன் மானிட மகன் என உலகெல்லாம் சொன்னது இவர்தான் அன்றே நான் சாகுல் ஹமீது என்றால் […]