பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

எந்த காமராஜர்?

காமராஜரை முதலில் நாடார்களிடமிருந்து காப்பாற்றவேண்டும், இல்லாவிட்டால் இன்னும் 10 ஆண்டுகள் கழித்து “காமராஜர் நாடாருக்காக அரிவாள் எடுத்து 50 பேரை வெட்டினார்..” எனும் அளவிற்கு வரலாற்றினை மாற்றிவிடுவார்கள். இயேசு சாகும்பொழுது இரு கொலைகாரர்களுக்கு நடுவில் இருந்தாராம் அப்படி காமராஜர் எப்பொழுதும் இப்பக்கம் கராத்தே செல்வின், அப்பக்கம் வெங்கடேசபண்ணையாருடனே போஸ் கொடுக்கின்றார் வெங்கடேசனும்,செல்வினும் நாட்டுக்காக எல்லையில் சாகசம் செய்தவர்களா? இந்த தமிழகத்திற்காவது ஏதும் செய்தார்களா என்றால் பதிலிருக்காது விரைவில் மேலே கன்னியாகுமரி முத்துலிங்கம் படமும், கீழே என்கவுண்டரில் கொல்லபட்ட […]

இது என்னடா டெல்லி பல்கலைகழகத்திற்கு வந்த சோதனை?

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார் இது என்னடா டெல்லி பல்கலைகழகத்திற்கு வந்த சோதனை? இவர் தாழ்த்தபட்டவர் என்றுவேறு செய்திகள் வருகின்றன, இப்பொழுதெல்லாம் பல்கலைகழகங்களில் தாழ்த்தபட்ட மாணவர்கள்தான் தற்கொலை செய்கின்றார்கள்… பிரச்சினைகளை வெளியில் சொல்லலாம், பெற்றவர்களிடம் சொல்லலாம், ஏதாவது ஒரு வகையில் சொல்லிவிட்டு சாகலாம் திடீரென சாவது பலபேருக்கு லாபமாகிவிடுகின்றது எப்படியோ உபி வெற்றியினை கொண்டாடமுடியாமல் மோடி கோஷ்டிக்கு பெரும் சிக்கல் வரப்போவது உறுதி.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் : பிறந்த நாள் இன்று….

 Born: 14 March 1879, Ulm, Germany Died: 18 April 1955, Princeton, New Jersey, United States கடந்த நூற்றாண்டை புரட்டிபோட்ட விஞ்ஞானிகளில் முதன்மையானவர் ஐன்ஸ்டீன் மற்ற விஞ்ஞானிகளை விட இவர் மகா வித்தியாசமானவர், அதாவது விஞ்ஞானிகள் என்றால் ஆய்வகத்தில் அமர்ந்திருக்கவேண்டும் , ஒரு மாதிரி தாடி வைத்திருக்கவேண்டும், எப்பொழுதும் சீரியசாக இருக்கவேண்டும், பிப்பெட் குழாய், வேதிபொருள் அல்லது உலகம் சுற்றும் வாலிபன் எம்ஜிஆர் போல இருட்டுக்குள் வியர்வை வழிய வழிய ஏதோ கிறுக்கி […]

நடிகை கஸ்தூரி மனம் திறக்கிறார்…

தன்னைபற்றி வந்த செய்தி தவறு என மறுக்கின்றது நடிகை கஸ்தூரியின் முகநூல் கணக்கு ஆனால் அவர் சொன்னதாக சொன்ன செய்தி மீடியாக்களில் வந்துகொண்டிருக்கின்றது இதில் எது போலி என தெரியாமல் திணற வேண்டியிருக்கின்றது.. கஸ்தூரியின் முகநூல் கணக்கு உண்மையானது என்றால், அந்த மீடியாக்கள் கண்டிக்கபட வேண்டியவைகள்… கடும் நடவடிக்கைக்கும் உட்படுத்த படவேண்டியவவை… இதோ கஸ்தூரி என‌ ஒருபெண் கதறுகின்றாள், அவள் குரலுக்கு வலுசேர்க்க யாருமில்லை, பெண்கள் குரலுமில்லை அந்த மீடியாவினை கண்டிக்க ஒருவருக்கும் துணிச்சல் இல்லை நாளை […]

திராவிட எழுச்சி குரலால் காமராஜ் முதல்வரானார்…

  திராவிடம் 50 என பேசகிளம்புவனெல்லாம் உருப்படியாக பேசவேண்டிய விஷயங்களை பேசுவதே இல்லை அதாகபட்டது காங்கிரசின் உட்கட்சி பூசல் அக்காலமே இருந்தது, ராஜாஜி ஒரு கோஷ்டி, சத்தியமூர்த்தி ஒரு கோஷ்டி, சத்தியமூர்த்தியின் சீடர்தான் காமராஜர். இது சுதந்திரம் பெற்றபின்னரும் தொடர்ந்தது.. இதில் ராஜாஜி இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்துவிட்டு, பிரிக்கபடாத சென்னை மாகாண‌ முதல்வராக அமர்ந்ததில் பலருக்கு விருப்பமில்லை இந்நேரம்தான் எதனை பிடித்து அரசியல் செய்யலாம் என திணவெடுத்திருந்த , வாத திறன் மிக்க திமுகவிற்கு ராஜாஜியின் […]

மானத் தமிழன் ஒருவன் அதிகாரத்தில்…. : சீமானின் சீற்றம்

தமிழர் வேண்டுமா? சிங்களர் வேண்டுமா? மானத் தமிழன் ஒருவன் அதிகாரத்தில் இருந்திருந்தால் சிங்களன் கை வைத்திருப்பானா? : சீமான் சீற்றம் இது என்ன அர்த்தமில்லா கோஷம், சிங்களர் இந்திய அரசுக்கு ஏன் வேண்டும்? அவர்கள் என்ன வாக்களிக்கவா போகின்றார்கள்? சிங்கள 100 எம்பிக்கள் இந்திய அரசினை ஆதரிக்க போகின்றார்களா அது இருக்கட்டும்…. முதல்வர் பழனிச்சாமி, உங்களை மானமில்லாதவன் என அங்கிள் சைமன் சொல்வதை கவனியுங்கள் இன்றைய தமிழக உச்ச அதிகாரம் நீங்கள்தான், அதுவும் தமிழர்தான், ஆக உங்களுக்கு […]

15 திமுக எம்எல்ஏக்கள் அதிமுகவில் இணைவார்கள்: டிடிவி தினகரன்

15 திமுக எம்எல்ஏக்கள் அதிமுகவில் இணைவார்கள்: டிடிவி தினகரன் 15 என்ன?, 70ம் கொண்டு செல்லுங்கள், ஆனால் அடுத்த தேர்தலில் ஒரு இடம் வென்றுவிட முடியுமா? திமுக இதனை போல எத்தனை எம் எல் ஏக்களையும் உருவாக்கும், உங்களால் இனி ஒரு எம் எல் ஏவினை உருவாக்க முடியுமா? ஒருவேளை 15 எம் எல் ஏக்கள் சென்றாலும் கூட அது அவர்களின் தற்கொலையே தவிர, எதிர்காலம் அல்ல… அதிமுக கட்சியினை அபகரித்தீர்கள், அப்படியே போயஸ் கார்டனை அபகரித்தீர்கள், […]

“பகைவனுக்கும் அருளும் நன்னெஞ்சு..” கலைஞருக்கு உண்டு… இன்னும் பிற

அது கலைஞர் முதல்வராக இருந்த காலகட்டம், சாதி பிரச்சினையில் ஆங்காங்கு பெட்ரோல் குண்டுகள் வீசபட்டன, தன் ஆட்சிகாலத்தில் சந்திரலேகா மீது ஆசிட் வீசபட்டத்தை மறந்த ஜெயலலிதா சொன்னார் “கலைஞரின் ஆட்சியில் குண்டு கலாச்சாரம் வந்துவிட்டது” பெரும் பிரச்சினையாக மாறிகொண்டிருந்த , அந்த நேரத்தில் பத்திரிகையாளர்கள் கலைஞரிடம் ஜெயாவின் இந்த குற்றசாட்டினை முன்வைத்து கேள்வி கேட்டனர் தனக்கே உரித்தான புன்னகையுடன் சொன்னார் கலைஞர் “என்னது? குண்டு கலாச்சாரமா?, அம்மையாரை பார்த்தாலே தெரியவில்லையா, யார் குண்டு கலாச்சாரத்தை கொண்டு வந்தவர்களென்று” […]

இது என்ன கொரியாவா? தமிழகம்தானே…

தமிழக தொலைகாட்சிகளுக்கு திடீரென ஞானோதயம் ஏற்பட்டிருக்கின்றது, எந்த புண்ணியவான் கொடுத்த ஐடியாவோ தெரியவில்லை, இப்பொழுதெல்லாம் வடகொரியா நிலவரத்திற்கு சென்றுவிட்டன‌ சன்டிவி மர்ம தேசம் எனவும், புதிய தலைமுறை டிவி கிம் தேசம் எனவும் போட்டு தாக்கிகொண்டிருக்கின்றன‌ உண்மை நிலவரத்தினை இருநாடுகளுமே சொல்லவில்லை, இன்றைய வடகொரியா கொஞ்சம் சிக்கலான நாடுதான், கெடுபிடி அரசுதான், ஆனால் அதன் மக்களை பெரும் மடையர்களாக போட்டு தாக்குகின்றன‌ அதாவது அம்மக்கள் அதிபரை கடவுளாக வணங்குகின்றார்களாம், அரசுக்கு ஒன்று என்றால் உயிர்துறப்பார்களாம், இன்னும் ஏராள […]

“என்னை கை பிடித்து இழுத்தார்கள்” நிகழ்ச்சியில் பங்குபெற்றது கஸ்தூரி…

தமிழகத்திற்கு வரும் தேசிய கட்சிகள் திராவிடத்தை ஏற்று கொள்ள வேண்டும் : கமலஹாசன் 50 வருடமாக அதுதானே நடந்துகொண்டிருக்கின்றது, எல்லா தேசிய கட்சிகளும் திராவிடத்தை ஏற்றுதான் கூட்டணி வைக்கின்றன‌ திராவிடத்தை ஏற்காத எந்த தேசியகட்சியும் இங்கு வெற்றிபெற வாய்ப்பே இல்லை, இது தமிழக எதார்த்தம் டோண்ட் வொரி கமலஹாசன்..  ஒரு ஹீரோ என்னை அடிக்கடி சீண்டிகொண்டே இருந்தார், அவரால் பல பட வாய்ப்புகளை இழந்தேன் , பெண்களுக்கு எதிராக பாலியல் கொடுமைகள் சினிமாவில் காலம் காலமாக நடக்கின்றன, […]