பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அறிவுகொழுந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

 அமைச்சரே, அந்த வ.உ.சி, பகத்சிங் பெயர்களை எல்லாம் ஏன் விட்டுவிட்டீர்கள்? காந்தி சிறையில் இருந்ததற்கும், ஆட்டோ சங்கர் சிறையில் இருந்ததற்கும் வித்தியாசம் தெரியாதவெரல்லாம் தமிழக அமைச்சர் 🙂 பால்வளதுறை அமைச்சரிடம் அவர் பாணியில் கேட்டால்தான் புரியும் அண்ணே… பாலும் கலயத்தில்தான் இருக்கும், கள்ளும் கலயத்தில்தான் இருக்கும், கலயத்தில் இருந்ததால் இரண்டும் ஒன்றாகுமா? … அதிமுகவில் தனி நபரோ, குடும்பத்தினரோ ஆதிக்கம் செலுத்தமாட்டார்கள் : டிடிவி தினகரன் அன்று நான் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன் என ஜெயலலிதா சொன்னதை […]

கமலஹாசனும் விடமாட்டார்….

 கமலஹாசன் மீது இந்து அமைப்புக்களுக்கு என்றுமே பெரும் கோபம் உண்டு, காரணம் அவர் அடிக்கடி பெரியார் வழி ஒரு தைரியம் மிக்க கலைஞனாக அவர் அடிக்கடி அவர்களை வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் அடிப்பார், இதனால் இவர் மீதான பார்ப்பன கும்பல் இவரை ஒரு கோடாரி காம்பாகவும், ஒரு குட்டிசாத்தானகவுமே கருதிற்று முன்பு அடக்கிவைக்கபட்டிருந்த அவ்விஷயம் இன்று புகைய தொடங்குகின்றது விரைவில் பற்றி எரியலாம் அந்த மனிதனுக்குத்தான் எத்தனை எதிர்ப்புகள் அவர் பெரியார் வழியானதால் பிராமண எதிர்ப்பு, கடவுள் நம்பிக்கை […]

மீண்டும் மீண்டும் மீத்தேன்…

இப்பொழுது மீண்டும் மீத்தேன் எடுக்க ஹைட்ரோ கார்பன் திட்டம் என அறிவித்திருப்பது மோடியின் அரசு தற்போது தமிழக ஆட்சியிலிருப்பது அம்மா கனவுகண்ட, சசிகலா வழிகாட்ட அமைந்திருக்கும் பழனிச்சாமி அரசு ஆனாலும் இதற்கு காரணம் கலைஞர், ஸ்டாலின் என சொல்பவன் சொல்லிகொண்டுதான் இருக்கின்றான் மீத்தேன் கம்பெனிகளோடு இவர்களையும் விரட்டவேண்டும்.. ஒரு பயலும் சசிகலா வழிக்காட்டுதால் அமைந்திருக்க்கும் பழனிச்சாமி அரசு இந்த திட்டத்தை பற்றி என்ன நிலைப்பாடு கொண்டிருக்கின்றது என கேட்கவில்லை மாநில அரசை மீறி எப்படி மத்திய அரசு […]

ஐரோப்பிய நாடுகள் ஒருவித பதற்றத்தில் இருக்கின்றன‌

ஐரோப்பிய நாடுகள் ஒருவித பதற்றத்தில் இருக்கின்றன‌ அதாகபட்டது தெற்கே அட்லாண்டிக் பகுதி அமெரிக்காவிற்கும் வடக்கே அர்டிக் பகுதி ரஷ்யாவிற்கும் என்பது வல்லோர்கள் வகுத்த விதி இவர்களின் அணு ஆயுத சங்கதிகள் எல்லாம் இங்குதான் பரிசோதிக்கபடும், அப்படி சமீபத்தில் ரஷ்யா ஒரு அணுகுண்டினை ஆர்டிக்கில் பரிசோதித்ததாகவும் அதன் துகள்கள் ஐரோப்பாவில் பரவுவதாகவும் ஒரு பரபரப்பு அத்துகள்கள் புற்றுநோயினை ஏற்படுத்தும் என்பதால் வெளியில் தெரிந்தல், மக்கள் தமிழர்களை போல அல்ல மாறாக பொங்கி எழுவார்கள் என்பதாலும் ஐரோப்பிய அரசுகள் திகைக்கின்றன‌ […]

மனிதனால் கிரகங்களை உருவாக்கிவிட முடியுமா?

இந்த விண்வெளி மிக மிக பிரமாண்டமானது, அதன் எல்லையினை கண்டது கடவுள் மட்டுமே அங்கு திசை, காலம், நேரம், கடிகாரம், காலண்டர் என எதுவுமில்லை, இவை எல்லாம் பூமியில் மனிதர்களுக்கானது, அங்கு எல்லாம் வேறுமாதிரி அ பாரத ரிஷிகளும், யோகிகளும் மனதால் ஓரளவு விண்வெளியினை அனுமானித்தனர், அன்றே நவகிரகங்கள், உப கிரகங்கள், நட்சத்திர கூட்டங்களை எல்லாம் கண்டிருந்தனர் ஆனால் அவர்கள் வந்திருந்த முடிவு, கோடிகணக்கான கிரகங்கள் உலகில் இருந்தாலும் மனிதன் வாழ முடியும் கிரகம் இந்த பூமி […]

வரலாறு இப்படித்தான் எழுதுகின்றது …

உலகம் முழுக்க சேர்ந்து போட்டு அடித்தவர்களில் முதலிடம் ஹிட்லருக்கு, அந்த கொடுங்கோலனை உலகமே சேர்ந்து தலையில் போட்டது ஆனால் ஹிட்லருக்காவது ஜப்பானும், இத்தாலியின் முசோலியும் ஆதரவு கொடுத்தனர், அவருக்காக பேசவாவது ஆளிருந்தது, ஆனாலும் ஹிட்லரை ஆதரித்த பாவத்திற்காக அவர்களும் அடிவாங்கினர், நமது நேதாஜியும் மர்மமானர் அதன் பின் உலகம் திரண்டது பின்லேடனை ஒழிக்க, அதில் கூட சீனா போன்ற நாடுகள் , ஈரான் போன்ற நாடுகள் எல்லாம் பெரும் ஆர்வம் காட்டவில்லை. லேடனுக்கு தாலிபன்கள் ஆதராவது இருந்தது […]

தமிழக அரசியல் பதிவுகள் போரடித்துவிட்டது…

தமிழக அரசியல் பதிவுகள் போரடித்துவிட்டது, இனி குறைத்துகொள்ளவேண்டும் அதிமுக திமுகவினை இந்த களபேரத்தில் அலசியாகிவிட்டது, பெரும் ஆளுமை மறையும்பொழுது அடுத்த தலைவர்கள் கட்சியினை பிடிக்கும்பொழுது குழப்பம் வரும் அண்ணா மறைந்தபொழுது கலைஞர் அடுத்த தலைவர் என யாரும் எதிர்பார்க்கவிலை, விரும்பவும் இல்லை. பெரும் எழுத்தாளர் என்றாலும் பல விஷயங்களில் அவர் இமேஜ் சரிந்திருந்தது சசிகலா அளவிற்கு எதிர்ப்பு இல்லை என்றாலும் அதில் முக்கால்வாசி இருந்தது, எத்தனையோ பேர் முகம் சுளிக்கத்தான் செய்தார்கள், கட்சி அழிந்துவிடும் என்றார்கள் ஆனால் […]

ஆளாளுக்கு எதனையாவது பிடித்து இழுத்து….

வரலட்சுமி, லீனா மணிமேகலை வரிசையில் இன்று “என் கையினை பிடித்து இழுத்தார்கள்” நிகழ்ச்சியில் இடம்பெறுவது பாடகி சுசித்திரா அதாவது அம்மணி ஒரு இரவு பார்ட்டிக்கு சென்றதாம், அங்கு தனுஷ், சிம்பு என பலர் இருந்தார்களாம், அங்கு தனுஷ் தலமையில் இரு கும்பல் இவரின் கையினை பிடித்து கும்பலாக இழுத்தார்களாம் அதுவும் கையில் ரத்தம் கட்டும் அளவிற்கு இறுக்கி பிடித்தார்களாம்.. சிம்புவும் கண்டுகொள்ளவே இல்லையாம், வேடிக்கை பார்த்தாராம்.. இப்படி புலம்பியிருக்கின்றார் பாடகி சுசித்ரா ஏம்மா சுசித்ரா, அந்த இம்சைகளில் […]

வீரமணியினை ஒரு ஆளாக கருதி பேசிகொண்டிருக்கின்றார்கள்

வீரமணியினை எல்லாம் ஒரு பொருட்டாக எண்ணி பதிவுபோட்டுகொண்டிருக்கின்றார்கள் ஒரு விபரீதமாக பாஜக அரசு தமிழகத்தில் அமைந்து வானதி சீனிவாசன் முதல்வாரானால் கூட ஏன் அமித்ஷா தமிழக முதல்வரானால் கூட பெரியார் கண்ட கனவு இதுதான் என கூசாமல் சொல்வார் அவர் அவர் நிலமை அப்படி, அவர் குணம் அப்படி. அண்ணாவும், கலைஞரும் விட்டு விட்டு ஓடிய பெரியார் சொத்துக்களை காப்பது என்றால் சும்மாவா? பெரியாரின் கொள்கைகளை எல்லாம் பெரியாரோடு கொளுத்த முடியும் கொளுத்தியாயிற்று, அவரின் சொத்துக்களையுமா கொளுத்தமுடியும்? […]

மிஸ்டர் பண்ருட்டியின் காமெடி பேச்சு…

ரகசிய வாக்கெடுப்பு என்பது கட்சிதாவல் சட்டத்திற்கு எதிரானது : பண்ருட்டி ராமசந்திரன் அதாவது அன்னார் சொல்லவருவது என்னவென்றால் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் உறுப்பினர்கள் எதிர்கட்சிக்கு வாக்களித்துவிடுவார்களாம் மிஸ்டர் பண்ருட்டி, இது என்ன ஸ்டாலின் மீதா நம்பிக்கை வாக்கெடுப்பு? உங்கள் கட்சிக்கு முதல்வர் மீதுதானே வாக்கெடுப்பு, இதில் எப்படி கட்சிதாவல்? ஆக அன்னார் ஏதோ பேசவேண்டும் என்பதற்காக பேசியிருக்கின்றார் எம்ஜிஆர் காலத்து நபர் இவர், ஜெயா சசி இல்லாத அதிமுகவில் உரக்க பேசும் வாய்ப்பு கிடைத்தவுடன் மனிதர் எதனையோ […]