பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தமிழக அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்கின்றது

தமிழக அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்கின்றது ஏதாவது செய்து சரிந்து கிடக்கும் கட்சி செல்வாக்கினை நிமிர்த்தமுடியாதா என ஏங்கி கிடக்கின்றது அதிமுக, அதனால் மக்களுக்கு எல்லா சலுகைகளும் செய்ய தயார் இதோ அரசு ஊழியரின் சம்பளத்தை உயர்த்தபோகின்றார்களாம், இதனால் என்னாகும்? அரசின் செலவு கூடும். அரசு எங்கே கை வைக்கும்? மாநிலத்தில் விலைவாசி கூடும். அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து அவர்களை தேர்தல் நேரத்தில் “பயன்படுத்தி” கொள்வதெல்லாம் கலைஞரின் அரசியல், பின் எம்ஜிஆர் அதனை செவ்வனே செய்தார் […]

திமுக அழிவு பாதையை நோக்கி செல்கிறது: வைகோ

திமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு பெரும் ஆதரவு பெருகுகின்றது, கட்சி சார்பின்றி தமிழகம் முழுக்க மக்கள் குவிகின்றார்கள் அடுத்த கட்சியினரும், காங்கிரஸ் போன்ற பெரும் கட்சியினரும் வந்து ஆதரவு தெரிவிக்கின்றனர் பெரும் மக்கள் எழுச்சிபோல தோன்றுகின்றது அதிமுக பெரும் அமைதி, அங்கு பேச யாருமில்லை என்பதால் குழம்பி தவித்து, இறுதியாக வைகோவிற்கு சிக்னல் காட்டியிருக்கின்றார்கள் வைகோ என்ன பேசுகின்றார் தெரியுமா? “அதிமுகவினை யாரும் அழிக்க நான் விடமாட்டேன்” அதாவது நானே அதிமுகவினை அழித்துவிடுவேன், இன்னொருவர் எதற்கு என பேசிகொண்டிருக்கின்றார், […]

குடும்ப அரசியல் …

எம்ஜிஆர் இருக்கும் வரை அதிமுக குடும்ப கட்சி அல்ல, அக்காலம் வரை திமுகவும் குடும்பகட்சி அல்ல, இளம்வயதிலே கட்சிபணிக்கு வந்த முரசொலிமாறன் மட்டுமே கலைஞர் அருகில் இருந்தார். அதுவும் எம்ஜிஆரின் பிரிவிற்கு பின்னரே யாரையும் நம்பமுடியா கலைஞர் மாறனை நம்பினார். மாறனும் இறுதிவரை கலைஞருக்கு கட்சிக்காரனாக‌ தன் விசுவாசத்தை காட்டினார். குடும்ப கட்சி கலாச்சாரத்தை முதலில் தொடங்கியது ஜெயாவின் அதிமுக. எம்ஜிஆரின் விசுவாசிகளை ஜெயா விரட்ட, சசிகலாவோ ஜெயாவின் விசுவாசிகளை விரட்டிவிட்டு தன் குடும்பத்தாரை கொண்டுவந்தார் நடராஜன், […]

ஸ்டாலின் முதல்வாராவதை, சசிகலா செய்யபோகின்றார்.

சட்டசபையின் முறைகேடான நிகழ்வுகளை கண்டித்து இன்று ஸ்டாலின் உண்ணாவிரத போராட்டம் அன்றைய சட்டசபை நிகழ்வுகளை தொடர்ந்து அவர் மெரினாவில் போராட்டம் தொடங்கினார், கட்சி அபிமானங்களை தாண்டி மக்கள் கூடியது தெரிந்தது கூடிய மக்கள் எல்லாம் திமுக என சொல்லிவிட வாய்பிருக்கின்றது என அஞ்சிய அரசு அவரை கைது செய்தது, வெளியில் வந்ததும் ஸ்டாலின் போராட்டத்தை விடாது தொடர்ந்திருக்கவேண்டும், ஏன் இடைவெளி விட்டார் என்பது தெரியவில்லை அந்த இடைவெளி விழுந்திருக்க கூடாது வாக்கெடுப்பு குறித்து திமுக வழக்கு தொடர்ந்திருப்பதும், […]

தினகரனிடம் சசிகலா கோபம் : செய்தி

“என்னைப்பார்க்க முதல்வர் வரமாட்டாரா?, அப்படி என்ன வேலை இருக்கின்றது?”, தன்னை சிறையில் சந்திக்க வந்த‌ தினகரனிடம் சசிகலா கோபம் : செய்தி ஒரு முதல்வர், சிறையிலிருக்கும் குற்றவாளியினை சென்று சந்தித்தால் அது பெரும் சிக்கலாகும் என்பது பழனிச்சாமிக்கு தெரிகின்றது அவர் முதல்வராக பணியினை தொடங்கிவிட்டார், விவசாயிகள் நிதி, பெண்கள் ஸ்கூட்டி வாங்க மானியம் என அள்ளி எறிகின்றார் கடும் கோபத்தில் இருக்கும் சசிகலாவிடம் தினகரன் என்ன சொல்லி சமாளித்திருப்பார், தமிழக மகளிருக்க்கெல்லாம் ஸ்கூட்டி வாங்கி கொடுக்கின்றோம், அதில் […]

இயக்குநர் என்னை “தொல்லை”படுத்தினார் : லீனா மணிமேகலை பரபரப்பு பேட்டி

பிரபல இளம் இயக்குநர் என்னை “தொல்லை”படுத்தினார் : லீனா மணிமேகலை பரபரப்பு பேட்டி என்னடா இது தமிழக பெண் கலைஞர்களுக்கு வந்த சோதனை? வரிசையாக வந்து சொல்லிகொண்டிருக்கின்றார்கள். இதில் ஏதும் கவனத்தை திருப்பும் சதி இருக்குமா? அல்லது நெடுங்காலம் அடக்கி வைக்கபட்டிருந்த விவகாரங்களா? என்பது தெரியவில்லை நேற்று வரலட்சுமி பிரபல தொலைகாட்சி அதிகாரி என்றார், இன்று இவர் பிரபல இயக்குநர் என்கின்றார், நாளை யார் என்ன “பிரபல” புகார் சொல்லபோகின்றார்களோ? சொல்லமுடியாது அக்கால சரோஜா தேவி வரை […]

ஜக்கிக்கு வழிகாட்டியதே தினகரன் குடும்பம்தான்

கோவை மலைபகுதியில் ஜெகதீஷ் எனும் ஜக்கி சாமியார் மட்டும் அட்டகாசம் செய்ததாக நான் சொல்லவில்லை, அவரை இந்துமத சாமியாராக நாம் எல்லாம் எண்ணவே இல்லை, அவரெல்லாம் இந்துமத சாமியார் என்றால் விவேகானந்தர் எல்லாம் யார்? அம்மலையினை அபகரித்துகொண்டிருப்பதில் ஜக்கிக்கு சற்றும் குறைவில்லாதது தினகரன் குடும்பத்தின் போதனை ஜக்கிக்கு வழிகாட்டியதே தினகரன் குடும்பம்தான் பொறியல் கல்லூரியும், பல்கலைகழகமும் நடத்தினால்தான் இயேசுவின் அருள் பெற்றவர்கள் என்பதை நிரூபிக்க அவர்கள் படும் பாடு கொஞ்சமல்ல‌ இயேசு கிறிஸ்துவினை லண்டன் வெள்ளைகாரர்களுக்கும், அமெரிக்க […]

இன்று உலக தாய்மொழி தினம்

இன்று உலக தாய்மொழி தினம் நமக்கு தாய்மொழி, தந்தை மொழி எல்லாம் தமிழ் தமிழுக்கு பல சிறப்புகள் உண்டு, சொன்னால் சொல்லிகொண்டே இருக்கலாம், செம்மொழி, ஆதிமொழி, தமிழின் வார்த்தைகள் எண்ணமுடியாதவென அதன் சிறப்புகள் ஏராளம் அதனைவிட மகா சிறப்பு அது இளமை குன்றாதது, அதனால்தான் சுந்தரம்பிள்ளை “உன் சீரிளமை திறம் வியந்து , செயல் மறந்து வாழ்த்துவோமே.” என தமிழை வியந்து பாடினார் உலகில் இளமை குன்றாத விஷயங்களில் தமிழும் ஒன்று, அதனை போல குஷ்பூவும் ஒன்று […]

ஜெயா பிறந்தநாளையொட்டி … : நடிகர் சத்தியராஜ்

ஜெயா பிறந்தநாளையொட்டி ராஜிவ் கொலைகைதிகள் விடுவிக்கபட வேண்டும் : நடிகர் சத்தியராஜ் ஏதோ காந்தி, அண்ணா போன்ற பெருந்தலைவர்கள் பிறந்தநாளில் கைதிகளை விடுவிக்க சொல்வது போல் இவர் பேசிகொண்டிருக்கின்றார் இன்றைய நிலையில் ஜெயலலிதா தண்டனை அனுபவிக்காமல் செத்த குற்றவாளி, ஒரு குற்றவாளியின் பிறந்தநாளில் இன்னொரு குற்றவாளியினை விடுவிக்கசொல்வது என்ன வகை? அக்கைதிகள் சாதரண வகை அல்ல, நாட்டின் மிகபெரும் குற்றத்தினை செய்திருப்பவர்கள் எனும் வகையில் அவர்களை விடுவிக்க சொல்ல இந்த நடிகருக்கு என்ன தகுதி இருக்கின்றது? மிகபெரும் […]

என்ன தவம் செய்தனையோ…

இவரை காங்கிரஸ் பெறவே, என்ன தவம் செய்துவிட்டது? கார்த்தி சிதம்பரம் மீதான புகார்களை சிபிஐ, அமலாக்கத்துறை முறையாக விசாரிக்கவில்லை: சு.சாமி ராஜிவ் கொலையிலும் சு.சாமி மீதான புகார்களை ஒரு கமிஷனும் முறையாக விசாரிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.