பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அட, முரசொலி வரைக்கும் வொர்த் ஆகிவிட்டோமா? இது நிஜமா?

அட, முரசொலி வரைக்கும் வொர்த் ஆகிவிட்டோமா?  இது நிஜமா? ஏதும் போட்டோஷாப்பாக இருக்கலாம் போல் தெரிகின்றது 🙂 முரசொலி  இதழை இந்த இணைப்பில் காணலாம்.  5ம் பக்கத்தில் இந்த முகநூல் பதிவு உள்ளது  https://drive.google.com/file/d/0B0_FFtnIeL2fQi1ENkRuRS1IcVk/view?usp=drivesdk

அடுத்து சந்தேகமே இல்லாமல் டெல்லி…

அரசியல் நெருக்கடி முடிந்தது என சொல்லிகொண்டாலும், தமிழக மக்கள் மனம் குமுறிகொண்டுதான் இருக்கின்றது, இந்த குமுறலுக்கு என்ன காரணம்? ஜெயலலிதா மகா சுத்தமான கரங்களுக்கு சொந்தக்காரர் என வாக்களித்த தமிழகம்தான் முதல் காரணம், தமிழகம் யாருக்கு வோட்டளித்தால் எங்களுக்கு என்ன?. ஆனால் நாங்கள் மட்டும்தான் தான் ஆட்சி செய்வோம் என அடம்பிடிக்கும் சசிகலா கும்பல் இன்னொரு காரணம். அடுத்து சந்தேகமே இல்லாமல் டெல்லி எப்படி டெல்லி? முன்பே சொன்னது போல டெல்லி அவ்வப்போது டெல்லி சூனியம் வைத்துகொண்டே […]

ஜெயா நினைவிடத்தில் பழனிச்சாமி அஞ்சலி…

ஜெயா நினைவிடத்தில் பழனிச்சாமி அமைச்சர்களோடு அஞ்சலி நீதிமன்றத்தால் தண்டனை கொடுக்கபட்ட ஒரு குற்றவாளியின் கல்லறையில் மாநில முதல்வர் அஞ்சலி செலுத்துகின்றார் அதோடு சிறையில் இருக்கும் இன்னொரு குற்றவாளி வாழ்க என அவரின் அமைச்சரவை கும்பல்கள் கத்துகின்றன‌ இதனை எப்படி இந்திய அரசியல் சட்டமும், உச்ச அதிகாரமும் அனுமதிக்கின்றன? ஏதோ காந்தி சமாதியிலும், காமராஜர் சமாதியிலும் வீர முழக்கம் எடுப்பது போல எடுத்துகொண்டிருக்கின்றார்கள் ஒரு மாநில‌ முதல்வர் வீரப்பன் சமாதியில் அஞ்சலி செலுத்தினால்? இன்னொரு முதல்வர் அயோத்தி குப்பம் […]

தவறுக்கு மேல் தவறு செய்கின்றது அந்த தரப்பு

தவறுக்கு மேல் தவறு செய்கின்றது அந்த தரப்பு மு.க ஸ்டாலின் கைது என செய்திகள் சொல்கின்றன‌ அதாகபட்டது நாங்கள் இப்படித்தான் செய்வோம், அராஜகம் மேல் அராஜகம் செய்வோம் என்பதுபோல் இருக்கின்றது அவர்கள் செயல்பாடு அந்த அக்கிரமகாரனுக்கும் கடைசிகட்டத்திலும் வாய்ப்புகள் உண்டு ராவணன் அப்படித்தான் இன்றுபோய் நாளைவா என அனுப்பபட்டான் இறுதிநொடிவரை துரியோதனுக்கு வாய்ப்பளித்தான் கண்ணன், அர்ச்சுணன் அழும் அந்த நொடிகூட துரியன் மனதை மாற்றும் என்ற நம்பிக்கை கண்ணனுக்கு இருந்தது ஆனால் அழியும் விதிகொண்ட ராவணனும், துரியனும் […]

ஹார்னரபில் ஆளுநர், வேர் ஆர் யூ…

வாக்களிக்க வந்தவர்களை வெளியேறசொல்லிவிட்டு என்ன தேர்தலை நடத்துவார் சபாநாயகர்? அப்படி செய்தாலும் எப்படி செல்லும்? ஆளுநரிடம் சென்று எங்களுக்கு வாய்பளிக்காத தேர்தல் எப்படி செல்லும் என கேட்கமுடியாதா? அதிமுகவிற்கு பால் ஊற்றிகொண்டிருக்கின்றார் தனபால், பெரும் தவறினை செய்துகொண்டிருக்கின்றார். யாருமே பேசகூடாது என்றால் பழனிச்சாமியினை அவராக தீர்மானித்துவிட்டார் என்றுதானே பொருள் இந்த சபாநாயகர் இருக்கும் சபையில் எப்படி நியாமான தேர்தல் நடக்கும்? ஹார்னரபில் ஆளுநர், வேர் ஆர் யூ… அங்கே பாருங்கள், அதிமுக மிக அமைதியாக பார்த்துகொண்டிருக்கின்றது, எந்த […]

கூவத்தூர் ரிசார்ட் மூடல்

கூவத்தூர் ரிசார்ட் மூடல், சுத்தம் செய்தல் உட்பட பராமரிப்பு பணிகளுக்காக மூடபட்டதாக அறிவிப்பு குப்பைகள் எல்லாம் வெளியேறிய பின் எதனை சுத்தபடுத்த போகின்றார்கள்? சட்டசபை நிலமையினை கண்டால் விரைவில் மறுபடியும் வருவார்கள் என்ற அச்சம் இருந்திருக்கலாம் ஆக தமிழ்நாட்டு ரிசார்ட் முதலாளிகளே, இது ரிசார்ட் அல்ல, மனநல நோயாளிகளுக்கான மருத்துவமனை என்ற போர்ட்டை உடனடியாக வாசலில் தொங்கவிடுங்கள் அப்பொழுதுதான் உள்வரமாட்டார்கள், அங்கு வந்து ஆலோசனை நடத்தினாலும் சட்ட்படி செல்லாது நிச்சயம் அக்கும்பல் இப்பொழுது அவசரமாக அடுத்த ரிசார்ட்டை […]

சட்டசபையில் இருந்து…

மிஸ்டர் தனபால் இப்படித்தான் சட்டமனற்றத்தில் பால் ஊற்றுவார்கள், இதனை கூட சமாளிக்க முடியாதா? வெட்கமாக இல்லை. எல்லோரும் குனிந்து நிற்க அது என்ன அதிமுக பொதுசெயலாளர் தேர்தலா? இது சட்டசபை, இது இப்படித்தான் இருக்கும். இப்படி பெரும் புயலினை எல்லாம் எதிர்கொள்ளவேண்டும் முடிந்தால், நியாயமாக சமாளிக்கமுடிந்தால் சமாளியுங்கள், இல்லை என்றால் கட்சி கலாச்சாரபடி அம்மா சமாதி, ரமாவரம் தோட்டம் என தியானம் செய்யுங்கள் இது உங்கள் கட்சி தலமை நினைத்தபடி நடக்க என்ன கூவத்தூர் ரிசார்ட்டா? ஆக […]

திமுகவினர் என்றால் சும்மாவா?

வங்கதேசத்திடம் வென்றுவிட்டதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவினை எதிர்கொண்டால் என்னாகும்? அப்படி சட்டமன்றத்தில் திமுகவினரின் கேள்வியினை எதிர்கொள்ளமுடியாமல் பழனிச்சாமி கோஷ்டி தடுமாறுகின்றது எதிரிகளே இல்லாத ரிசார்ட்டில் விவாதித்துவிட்டு களத்தில் வந்து திமுகவினை எதிர்கொள்ள பழனிசாமி கோஷ்டி மிக மிக தடுமாறுகின்றது கலைஞரிடம் பாடம் படித்ததை திமுகவினர் மிக அழகாக நிரூபிக்கின்றனர், பேச வெண்டிய இடத்தில் போட்டு தாக்குகின்றனர் திமுகவினர் என்றால் சும்மாவா? ப்ப்ப…ப்பப..ப்பப்ப் என பழனிச்சாமி கோஷ்டி தடுமாறிகொண்டிருக்கின்றது அரசியல் என்றால் சின்னம்மா, தினரகரன், பன்னீர்செல்வம் என்றுமட்டு படித்துவிட்டு […]

அது சட்டமன்றமா? அல்லது குத்துசண்டை அரங்கமா?

மக்களிடம் இவர் தான் முதலமைச்சர், நாங்கள் எல்லாம் சும்மா, அவருக்காக வாக்களியுங்கள் என சொல்லி தேர்தலில் வாக்கு கேட்டு வருவார்களாம் மக்களும் அவர் முதல்வராக ஆதரவு என வாக்களிப்பார்களாம், அவரும் முதல்வராவாராம் ஆனால் அவர் செத்துவிட்டால் உடனே இவர்கள் 233 பேரும் அடுத்த முதல்வரை நாங்கள் தான் தேர்ந்தெடுப்பொம் என அவர்களுக்குள் அடித்துகொள்வார்களாம் முதல்வரை மக்கள்தானே தேர்ந்தெடுக்க வேண்டும், நீங்கள் எப்படி? என்றால், அப்படியெல்லாம் இல்லை ரிசார்ட்டில் போட்டு அடித்தால் அவர்களாக ஒருவரை ஆதரித்தால் அவர்தான் முதல்வர் […]