பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

எம்ஜிஆருக்கு பின் ஜெயலலிதாவினை நானே பாதுகாத்தேன் : சசிகலா

“எம்ஜிஆருக்கு பின் ஜெயலலிதாவினை நானே பாதுகாத்தேன், கட்சியினை வழிநடத்தினேன் அன்று எம்ஜிஆருக்கு ஜெயா உதவியாளராக இருந்து அவர் மறைவுக்கு பின் ஒதுங்க நினைத்தபொழுது நானே அவரை தடுத்தேன், கட்சிக்காக உழைத்தேன், கட்சியினை நடத்தினேன் அன்று எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜெயா எந்த நிலையில் இருந்தாரோ அதே நிலையில்தான் நானும் இருகின்றேன்” : சசிகலா இதன் மூலம் சின்னம்மா சொல்ல வரும் விஷயம் என்னவென்றால், அரசியலிலிருந்து விலக நினைத்த ஜெயலலிதாவினை பிடித்து அரசியலில் திணித்து அவரை முதல்வராக்கியது இவர்தான் […]

இன்று காதலர் தினம் …

காதலர் தினம் கொண்டாட‌ போகின்றார்களாம், அதுவும் பிரவரி 14 விடியற்காலை தொடங்கி நள்ளிரவு வரை மட்டும் கொண்டாடுவார்களாம். அன்றுதான் காதலை வாழவைக்க வந்த வாலண்டைன் நாளாம். அவர்தான் காதலுக்கு வடிவம் கொடுத்தவராம். அதற்கு முன்னால் காதலே இல்லை என்பது, வெள்ளையர் வருமுன் இந்தியாவில் மனிதர்களே இல்லை என்பதை விட பெரும் பொய். எவ்வளவு பெரிய பொய்யினை நம்பவைக்கபட்டு இருக்கின்றோம், அதற்கு இச்சமூகம் தலையாட்டிகொண்டு பின்செல்கிறது. ஒருவேளை செத்தாலும் சேர்ந்து சாகலாம் என ஏவாள் ஆதாமுக்கு பழம் கொடுத்த […]

வெரி ஃபன்னி லேடி …..

பன்னீர் ஆட்சிக்கு வந்தாலும் சசிகலா கும்பல் ஆளவிடாது, கவிழ்க்க வழிதேடும் சசிகலா ஆளவந்தாலும் பன்னீர் கும்பல் எப்பொழுது கவிழ்க்கலாம் என சிந்திக்கும், இன்னொன்று 119 பேருக்கும் அமைச்சர் பதவி, இதர பதவிகள் என்றால் போலிஸ் கமிஷணர் பதவி தவிர எல்லா இடத்திலும் சசிகலா ஆதரவு எம் எல் ஏக்கள் நிறைந்திருப்பார்கள் அது யதார்த்ததிற்கு சரிவராது, ஆனால் அதிருப்தி கும்பல் விடாது ஆக நிலையான ஆட்சி இருவருக்குமே சாத்தியமில்லை எனவே ஆளுநர், வெற்றிலை துப்பிவிட்டு “இனி தேர்தல் தாண்டா […]

சசிகலா நிலமையும் அப்படித்தான் உள்ளது….

“தோல்வி மனிதனுக்கு வெறியூட்டும் வெறியில் மதிமாறும் எதிரி அது சமயம் இடம் கண்டு அடிப்பான் வெறி மேலும் ஓங்கும் வெறியில் நெறிகெட்டு, அறம் கெட்டு, தடம் மாறி படுகுழியில் வீழ்வான் ..இல்லை எதிரி விழ வைப்பான் இந்த அநீதியில் கை தேர்ந்தவன் சகுனி..” கர்ணன் படத்தில் என்.டி ராமராவ் இப்படி சிவாஜி கணேசனுக்கு போதித்துகொண்டிருக்கின்றார் சசிகலா நிலமையும் அப்படித்தான் உள்ளது. சசிகலாவும் அப்படித்தான் தோல்வியால் எழுந்த வெறியியில் மதி கெட்டு, தடம் மாறி படுகுழியில் விழுந்துகொண்டிருக்கின்றார், எந்த […]

சிங்கம் சசிகலா பேசுகிறார்..

ஜெயலலிதாவும் நானும் சென்னை ஜெயிலையும் பார்த்திருக்கிறோம். பெங்களூரு ஜெயிலையும் பார்த்திருக்கிறோம் :சசிகலா ஆமாம், திகார் ஜெயிலை இனி இவர் மட்டும் பார்க்க போகின்றார் சரி, இவர் சென்னை சிறைக்கும், பெங்களூர் சிறைக்கும் எதற்காக சென்றா? நாட்டு விடுதலை? இந்தி எதிர்ப்பு? சாதி ஒழிப்பு? காவேரி பிரச்சினை? அணுவுலை? விவசாயிகள் பிரச்சினை? மீணவர் பிரச்சினை? ஜல்லிகட்டு? குறைந்த பட்சம் மதுகடை எதிர்ப்பு? இப்படி ஒன்றுமே இல்லை மாறாக கொள்ளை அடித்த வழக்கில் உள்ளே சென்றுவிட்டு , ஏதோ தியாக […]

சமாதிகளுக்கு முதலில் சமாதி கட்ட வேண்டும்

தமிழகம் எப்படிபட்ட வரலாற்றினை கொண்டது சங்ககாலம் முதல் அதன் சிறப்பென்ன? எத்தனை பெரும் மன்னர்களும், ராஜராஜன் போன்ற அழியா புகழுடை முடிகள் இருந்தன? கம்பன், வள்ளுவன் என அதுகொடுத்த சிறப்பென்ன? அகத்தியன், போகன் என அதன் சித்தர் வரிசையென்ன? சீனிவாச ராமானுஜம் முதல் அப்துல்கலாம் வரை விஞஞான வரிசை என்ன? பெரியார், காமராஜர் என இந்தியாவினில் உயர்ந்த தலைவர்கள் என்ன? பூலித்தேவன் முதல் சிதம்பரனார் வரை எத்தனை தியாகிகள்? வள்ளலார் முதல் எத்தனை பெரும் அவதாரங்கள் உதித்த […]

ராதாபுரம் தொகுதி மட்டும் ஏன் அமைதியாக இருக்கின்றது?

ஒரு காலத்தில் தமிழகத்தின் ஒரே சுயேட்சை எம் எல் ஏவினை தேர்ந்தெடுத்து தமிழகத்தினை திரும்பி பார்க்க செய்தது ராதாபுரம் தொகுதி இன்றோ சசிகலாவிற்கு எதிராக பெரும் அலையடிக்க, அவர் ஆதரவு அதிமுக தொகுதி எம் எல் ஏக்களை கொண்ட மக்கள் எல்லாம், தங்கள் தொகுதி எம் எல் ஏக்களை கண்டிக்கவும் , விரட்டவும் தொடங்கியுள்ள நிலையில்.. மக்களின் எதிர்ப்புக்கு பயந்தே எம் எல் ஏக்கள் எல்லாம் பன்னீரிடம் ஓடி செல்லும் நிலையில்.. ராதாபுரம் தொகுதியில் ஒன்றும் நடந்ததாக […]

கூவத்தூர் வேண்டாம், சுவிட்சர்லாந்து வேண்டும்…

  ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அடிமைகளை விற்க செல்லும் கப்பலில் அடிமைகள், தங்கள் குடிநீர் கோரிக்கைக்காக‌ அந்த காவலர்களிடம் கேட்பார்கள், அது கூட‌ கிடைக்காத பட்சத்தில் மிரட்டுவார்கள் நாங்கள் கடலில் குதித்தோ அல்லது பட்டிணி கிடந்தோ செத்துவிட்டால் எங்களை அடிமைகளாக‌ விற்க முடியாது, எனவே எங்களை நன்றாக கவனித்தால் உங்களுக்கு லாபம் என மணிமாறன் வேடத்தில் ராமச்சந்திரன் தொடங்க, நாகேஷ் அழிச்சாட்டியம் தொடங்கும் முதலில் தண்ணீர் கேட்ட அவர், அதன் பின் பாயாசம் வேண்டும், கால் அமுக்க […]

என்னதான் செய்கின்றது பீட்டா?

நியுசிலாந்தில் இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட திமிங்கலங்கள் இறந்துவிட்டன, நிச்சயமாக மானிட தவறு என்கின்றார்கள் பெரும் உயிர்வதை அங்கு நடந்திருக்கின்றது ஆனால் அங்கு பீட்டாவினையும் காணோம், ராதா ராஜன் என்பவரையும் காணவில்லை, ஒரு புளூகிராஸ் அமைப்புகளையும் காணவில்லை காரணம், இந்த திமிங்கல சாவுக்கு காரணம் பெரும் கைகள் எனும் சர்ச்சை வருகின்றது, ஆக பீட்டா நம் ஜல்லிகட்டு என்றால் பாயும், திமிங்கலங்கள் சாவு என்றால் வாயினை மூடி கொள்ளும். சென்னையில் எண்ணெய் கசிந்து ஆமைகளும் மீன்களும் சாகும் பொழுதும் […]

கவர்னர் வீணாக காலதாமதம் செய்கிறார் :சசிகலா எரிச்சல்.

கவர்னர் வீணாக காலதாமதம் செய்கிறார் :சசிகலா எரிச்சல். என்னது 2 நாள் என்பது காலதமதமா? 27 வருடமாக இவர்களால் பாதிக்கபட்ட குடும்பம் எத்தனை, கங்கை அமரன் முதல், பாலு ஜூவர்லர்ஸ் வரை எத்தனை குடும்பம நீதிக்காக‌ இன்னும் அழுதுகொண்டிருக்கின்றது இன்னும் தெரியாதது எத்தனை ஆயிரம் குடும்பமோ? சொத்துகுவிப்பு வழக்கு 18 வருடம் இழுத்தது, எப்படி எல்லாம் வாய்தா வாங்கினார்கள், எப்படி எல்லாம் இழுத்தடித்தார்கள், அப்பொழுது ஆச்சார்யா உட்பட எத்தனை பேருக்கு எப்படி இருந்திருக்கும்? 2 நாட்கள் இவர்களால் […]