பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அமெரிக்கா – ரஷ்யா பனிப்போர்

தமிழக காமெடிகள் பலவாறு நடந்துகொண்டிருக்கின்றது, தமிழன் என சொன்னாலே மற்ற நாட்டுக்காரர்கள் அல்லது அண்டை மாநிலத்தோர் ஒரு மாதிரி வாயில் கைவைத்து சிரிக்கின்றார்கள் சிரிக்கட்டும், தமிழக தலைவிதி அப்படி தமிழக காமெடிகளை பார்த்துகொண்டிருக்கும் பொழுதே, உலகில் பெரும் சீரியசான விஷயம் நடந்துகொண்டிருக்கின்றது அதாகபட்டது ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் நடக்கும் மறைமுக யுத்தம் பிரசித்தி பெற்றது, ஹிட்லர் காலத்திற்கு பின் அதுதான் உலக கவனம் பெற்றது. சோவியத் சிதறவும், எல்ட்சின் காலத்தில் ரஷ்யா அணுஆயுதம் குறைப்போம் என இறங்கி வந்ததும் […]

சீமானோடு தோளில் கைபோட்டவர் ஆட்சிதான் நடக்கின்றது?

இலங்கை அரசு தமிழக மீணவர்களை இப்பொழுது பழிவாங்கும் விதம் மிக கொடுமையானது முன்பு எல்லை கடந்தால் சுடுவார்கள், அடிப்பார்கள் அத்தோடு விரட்டிவிடுவார்கள் அல்லது சிறையில் அடைத்து பின் விடுவிப்பார்கள். மோடி ஆட்சியில் துப்பாக்கி சூடு இல்லை, ஆனால் அதனை விட மிக பயங்கரமான விஷயத்தில் சிங்களம் இறங்கி இருக்கின்றது மிகுந்த ராஜதந்திர திட்டத்தினை முன்னெடுக்கின்றார்கள், அதாவது எல்லைகடக்கும் மீணவனை கைதுசெய்து விட்டுவிடுவார்களாம், ஆனால் அவர்களின் படகுகள் இலங்கைக்கு சொந்தமாம் சில படகுகளை கைபற்றியும் விட்டார்கள், விவகாரம் வெடிக்கின்றது, […]

திருமா சசிகலாவினை சந்தித்திருக்கின்றார்…

புத்தாண்டில் புதுமை மலரட்டும் : கீ.வீரமணி அங்கே “புதுமை தலைவி” என ஆர்ப்பரிக்கின்றார்கள், இவரோ புதுமை மலரட்டும் என்கின்றார் இப்படி ஒரு இனமான ஜால்ராவினை பார்க்கமுடியுமா? வீரமணியினை தவிர யாரிடமும் பார்க்க முடியாது, ஒருவேளை அந்த “புதுமை தலைவி” பட்டத்தை இவர்தான் வழங்கியிருப்பாரோ? இவர்கள் காமெடி இப்படி என்றால் திருமா சசிகலாவினை சந்தித்திருக்கின்றார் அடங்க மறு, அத்து மீறு என்பதெல்லாம் தூக்கி கடாசிவிட்டு ஹிஹிஹி என சிரித்துகொண்டிருக்கின்றார். கொடியன்குளம் கலவரமும் அந்த படுகொலைகளையும் தாண்டி எப்படி திருமாவால் […]

2016ம் ஆண்டு முடிந்து புத்தாண்டு பிறந்துவிட்டது

2016ம் ஆண்டு முடிந்து புத்தாண்டு பிறந்துவிட்டது கோலகலமான கோலாலம்பூர் அதனை மிக உற்சாகத்துடன் கொண்டாடி கொண்டிருக்கின்றது, பல இடங்களில் கூடி நின்றுவரவேற்கின்றனர், சும்மாவே தூங்கா நகரம் இது. காரணாம் கிடைத்தால் விடுவார்களா? மற்ற மதத்து மக்களுக்கு பிரச்சினை இல்லை, நள்ளிரவில் எப்படியும், எங்கும் கொண்டாடலாம், ஆனால் கிறிஸ்தவர்கள் கண்டிப்பாக ஆலயத்தில்தான் அதுவும் பிரார்த்தனையில்தான் வரவேற்க வேண்டும் என்பது விதி என்ன இருந்தாலும் போப்பாண்டவர் கொடுத்த காலண்டர் அல்லவா, அவர் சொன்னபடி பிரார்த்திவிட்டுத்தான் முதல் தாளை தொடவேண்டும் என்பது […]

“கேட்டாச்சி கேட்டாச்சி சின்னம்மா ஊமை இல்லை”

ஏதோ ஒரு படத்தில் விவேக் கை இல்லாதவர் போல நடிப்பார், ஆனால் அந்த கையினை கண்டுவிட்டு வடிவேலு ஓடிவருவார் “பார்த்துட்டேன்..பார்த்துட்டேன்.புரூஸ் பார்த்துட்டேன்” அப்படி சின்னம்மா பேச்சினை கேட்டுவிட்டவுடன் நானும் ஓடினேன், “கேட்டாச்சி கேட்டாச்சி சின்னம்மா ஊமை இல்லை” ஓடிவிட்டு மெதுவாகத்தான் அவரின் பேச்சினை கவனித்தேன் ஒரு சாமன்யபெண் சசிகலா 30 வருடம் ஜெயாவுடன் இருந்ததால் அந்த பேச்சு ஸ்டைல் ஒட்டி இருக்கலாம், அப்படி அடியொற்றி இருக்கின்றது, ஜெயாவிற்கு எழுதி கொடுத்தவர் அப்படியே சசிகலாவிற்கும் கொடுத்திருக்கின்றார் ஆக அது […]

ஜோதிமணி, குஷ்பூ போன்றவர்களை ஒன்றும் செய்ய முடியாது…

Jothimani Sennimalai சகோதரி ஜோதிமணியினை பாஜகவினர் மிக தரகுறைவாக விமர்சித்த செய்திகள் அணல் பறக்கின்றன‌ இது ஒன்றும் புதிதான நிகழ்வு அல்ல, பெண்கள் மீது எல்லா துறைகளிலும் வீசபடும் ஆயுதம் இது. பதில் கருத்து ஒன்றும் இல்லா நிலையில் பெண்ணை ஆபாசமாக திட்டி அவளை மன ரீதியாக உடைய வைக்கும் ஒரு வித மனவியல் தாக்குதல் இது எல்லா நாட்டு கலாச்சாரத்திலும் இது ஊறி கிடக்கின்றது, எந்த இனமும் விதிவிலக்கு அல்ல. சில நாகரீக சமுகம் என […]

சின்னம்மா அதிமுக பொது செயலாளராக பதவி ஏற்றார்…

  எம்ஜிஆர், ஜெயா சமாதிகளில் சசிகலா அஞ்சலி, அண்ணா சமாதியிலும் அஞ்சலி செலுத்தினார் ஜெயா, எம்ஜிஆர் சமாதி சரி, அண்ணா சமாதியில் எதற்கு அஞ்சலி, அவர்தான் இந்த கட்சிக்கு பிதாமகன் என்பதற்கா? இருக்கலாம் ஆனால் அப்படியே கோபாலபுரம் சென்று கலைஞரிடமும் ஒரு ஆசி வாங்கி இருக்கலாம் சசிகலா நடராஜன் திருமணத்தினை அவர்தான் ஒருகாலத்தில் நடத்தி வைத்தவர் அது என்ன ராசியோ கலைஞருக்கு? அவரை ஆதரித்தவர்கள்/எதிர்த்தவர்கள் மட்டுமல்ல, எதிர்த்தோருடன் இருந்தவர்கள் கூட சிகரம் தொடுகின்றார்கள் இன்றைய தேதியில் சசிகலா […]

இந்த வருடம் முடியபோகின்றது …

இந்த வருடம் முடியபோகின்றது வழக்கம் போலவே இந்த வருடமும் வெட்டியாக கழிந்தது, மனதிற்கு தோன்றுவதை கிறுக்கி வைத்ததில் பல நண்பர்கள் கிடைத்தார்கள், அவர்களில் பலர் பயனுள்ளவர்கள் பயனுள்ளவர்கள் என்றால் அவரைக்காயிலிருந்து ஆட்டுகுடல் வரை எப்படி விதம் விதமாக சமைப்பது என சொல்லி தருகின்றார்கள், அப்படி பல நண்பர்களை பெற்றது மிக்க மகிழ்ச்சி இது ஒரு பொழுதுபோக்கு தளம், இங்கு புரட்சியோ சீரியஸ் கருத்துக்களோ வேலைக்கு ஆகாது அதோ பார்த்தீர்களா ஹா ஹா ஹா, இதோ பார்த்தீர்களா ஹோ […]

கடவுளே “சின்னமாவிற்கு பேச்சு கொடு” என்ற கோஷம் இனி தமிழகமெல்லாம் ஒலிக்கும்

மறுபடியும் அடிமைகள் மண்சோறு, அலகு குத்துதல், காவடி எடுத்தல், தீ மிதித்தல் போன்ற பக்திகளில் மூழ்க வாய்பிருக்கின்றது எதற்கு? பொதுகுழு எனும் பட்டத்து யானை மாலை சூட்டிய பின்னும் சின்ன அம்மாவிற்கு பேச்சு வரவில்லை என்றால் என்ன செய்ய? அதுதான் வழி, விரைவில் பால்குடம் எடுக்க கிளம்புவார்கள் சின்னமாவிற்கும் ஆலோசனை கொடுப்பார்கள் சின்னம்மாவும் சரஸ்வதி சபதம் சிவாஜி கணேசனாக இப்பொழுது தெய்வத்திடம் முறையிட்டு கொண்டிருப்பார் இனி அந்த தெய்வமே வந்து “செல்வம், கல்வி,கட்சி மக்கள் செல்வாக்கு என்பதை […]

அரசியலில் யாரையும் நம்ப கூடாது….

காமராஜர் தமிழக காங்கிரஸ் தலைவராக அதாவது தனக்கு எதிரான கட்சியின் தலைவராக இருந்தபொழுது அவரின் ஒவ்வொரு அசைவினையும் விமர்சித்த கலைஞரை எம்ஜிஆர் கட்சியின் பொதுசெயலாளராகும்பொது நடிகர் கட்சி, அட்டை கத்தி என்றெல்லாம் வாட்டிய கலைஞரை ஜெயா ஜாணகி என பிரிந்து நின்றபொழுது நிமிடத்திற்கொருமுறை அறிக்கை அனுப்பிய கலைஞரை ஜெயா ஆட்சியினையும், கட்சியினையும் கைபற்றும்பொழுது அம்மையார் என சொல்லி சொல்லி விமர்சித்த கலைஞரை சசிகலா பொறுப்புக்கு வரும்பொழுது காணவே இல்லை, அவருக்குத்தான் வயதாகிவிட்டதென்றால், அடுத்த வாரிசாவது சில கருத்தோ, […]