பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நாச்சியார் திருமொழி : 74

நாச்சியார் திருமொழி : 74 ( பாசுரம் 9.8, 9.9) காதல் கொண்ட மனம் கடல் போன்றது அங்கு அலைகள் ஓயாமல் வீசிக்கொண்டே இருக்கும், அந்த அலையில் ஆடும் படகுபோல் ஆண்டாளின் எண்ணங்கள் ஆடிக்கொண்டிருந்தன‌. அவளுக்கு உண்ண பிடிக்கவில்லை, உறக்கம் சுத்தமாக வரவில்லை, எப்போதும் கண்ணனின் நினைவாக ஏங்கி கொண்டிருந்தவளுக்கு அதிகாலையிலே விழிப்பு வந்தது. ஆனால், அந்த நிசப்தமான அமைதியில் என்ன பொழுது அது என அவளால் அறியமுடியவில்லை. அப்போது செம்போத்து பறகை “க்கும்ம் க்கும்ம்” என […]

நாச்சியார் திருமொழி : 75

நாச்சியார் திருமொழி : 75 ( பாசுரம் 10.1) ஆண்டாளுக்கு கண்ணில் காணும் எல்லாமும் கண்ணனை நினைவுப்படுத்தி கொண்டே இருந்தன. அவளும் கண்ணில்பட்ட எல்லாவற்றையும் கண்ணனிடம் தூது அனுப்பித் தோற்றுக்கொண்டே இருந்தாள். மேகம் குயில் என எல்லாவற்றையும் அனுப்பியாயிற்று என்பதால் மனதில் ஒரு சலிப்பும் எட்டிற்று. தானே எப்போதும் கண்ணனைத் தேடிகொண்டிருப்பதையும், அவன் தன்னைத் தேடி வரவில்லை என்பதையும் எண்ணியபோது அவன் மேல் கோபம் உண்டாயிற்று. தன் அன்பை அவன் புரிந்துகொள்ளவில்லை தானே வலிய வலிய தேடுவதில் […]

நாச்சியார் திருமொழி : 76

நாச்சியார் திருமொழி : 76 ( பாசுரம் 10.2) ஆண்டாள் அதிகாலை கண்விழித்தாள். கனவெல்லாம் கண்ணன் நினைவாக நிறைந்திருந்த அவளின் தூக்கம் கலைந்திருந்தது. இப்போது நினைவெல்லாம் கண்ணன் எனும் நிலைக்குள் வழமையான நிலைக்குள் வந்தாள். வீட்டின் மாடக்குழியில் இருந்த தீபம் அணைந்திருந்தது. எங்கும் சூழ்ந்திருந்த காரிருளின் கருமை அவளுக்குக் கண்ணனையே நினைவுப்படுத்தியது. புன்னகைத்தபடி வீட்டின் பின்பக்கம் இருந்த நெருப்புக் குழியில் இருந்து நெருப்பெடுத்து விளக்கேற்றும்படி எழுந்தவள் வழமை போல் முதல் பெயராக வாய் திறந்து “கண்ணா” என […]

நாச்சியார் திருமொழி : 77

நாச்சியார் திருமொழி : 77 ( பாசுரம் 10.3) ஆண்டாளுக்கு மீண்டும் மீண்டும் கண்ணனின் நினைவு அலைமோதிற்று. அவளின் உடலின் ஒவ்வொரு அணுவிலும் குடிகொண்டிருக்கும் அந்தக் கண்ணனின் நினைவுகளும், அவளின் சிந்தை முழுக்க நிரம்பிய அந்த மாயவனின் எண்ணங்களும் அவளுக்குள் மீண்டும் மீண்டும் அலைமோதிக் கொண்டே இருந்தன‌. காதல் கொண்ட மனம் கொண்டவனைத் தவிர வேறேதும் நினைப்பதில்லை, முட்டைகளை அடைகாக்கும் பறவைபோல் அவன் நினைவுகளை அவள் நெஞ்சுக்குள் வைத்து காத்துக் கொண்டிருந்தாள். அவன் இனி எப்போது வருவான் […]

நாச்சியார் திருமொழி : 78

நாச்சியார் திருமொழி : 78 ( பாசுரம் 10.4) எப்போதும் கண்ணன் நினைவிலே இருக்கும் ஆண்டாள் கார்த்திகை மாத மழைக்காலத்தில் சிக்கிக்கொண்டாள், பொழியும் மழையும் சூரியன் காணா இதமான பொழுதுகளும், நட்சத்திரமும் நிலவும் காணா இருளில் மழையோடு வரும் குளிர்க்காற்றும் எல்லா உயிர்களையும் சிலிர்க்க செய்வது போல் ஆண்டாளையும் ஒரு ஏகாந்த மனநிலைக்குள் தள்ளியிருந்தது. எல்லா உயிர்களும் அதனதன் துணையுடன் இன்புற்றிருக்கும் அந்தக் கார்க்காலத்தில் மானும் மயிலும் எல்லா உயிரும் இணைந்திருக்கும் காலத்தில் தவளை செய்த பாக்கியம் […]

நாச்சியார் திருமொழி : 79

நாச்சியார் திருமொழி : 79 ( பாசுரம் 10.5) ஆண்டாளுக்கு மிகப் பெரிய குழப்பம் அதிகரித்தது, அப்படியே அது வருத்தமாயிற்று, அவளால் வெளியில் செல்ல முடியவில்லை. காரணம் கோவைக்கனி, முல்லை மலர் என எதைக் கண்டாலும் கண்ணன் நினைவு அவளை ஆட்டிவைத்தது, அதைக் கண்டு அவை அவன் நினைவில் மூழ்குவதும் அந்த மாயவன் வந்து அவளிடம் பேசிவிட்டு ஏங்க வைத்துவிட்டு செல்வதும் அதிலிருந்து அவள் வெளிவரமுடியாமல் அவன் நினைவில் போராடுவதும் அவளுக்கு மிகக் கொடிய துன்பமாயிற்று. அதனால் […]

நாச்சியார் திருமொழி: 80

நாச்சியார் திருமொழி: 80 ( பாசுரம் 10.6, 10.7) ஆண்டாள் மிகுந்த குழப்பத்தில் இருந்தாள். வைகுண்ட ஏகாதசி கொண்டாட அந்த மார்கழியில் மக்களெல்லாம் காத்திருந்தனர், அவளோ கடும் குழப்பத்தில் இருந்தாள், அவளைக் கண்ணன் தன்னோடு சேர்ப்பதுமில்லை, அதே நேரம் விலகவிடுவதுமில்லை. அவளுக்குள்ளோ அச்சம் மிகுந்துகொண்டே வந்தது, அவள் எப்போதும் அவன் நினைவில் அவன் ஏக்கத்திலே நிறைந்திருக்க, அவனோ அவளை ஒரு விளையாட்டு பொருளாகக் கருதுகின்றானோ எனும் பெரும் கலக்கம் அவளுள் வந்தது. அந்தக் கலக்கம் கொஞ்சம் கொஞ்சம் […]

நாச்சியார் திருமொழி : 69

நாச்சியார் திருமொழி : 69 ( பாசுரம் 8.7, 8.8, 8.9) ஆண்டாள் எப்போதும் போல் கண்ணன் நினைவில் வாடிக் கொண்டிருந்தாள். ஒரு செடி நீருக்கு ஏங்குதல் போல் தரை வந்த மீன் நீருக்குத் துடிப்பதைப் போல் தவித்துக் கொண்டிருந்தாள், வேறு எந்தச் சிந்தனையுமே இல்லாதபடி ஒரே நினைவாய் அவன் அவளை முழுக்க ஆட்கொண்டிருந்தான். அவன் நினைவால் உருகிக்கொண்டிருந்த அவளுக்குக் காண்பவை எல்லாமே அவனை நினைவுப்படுத்திக் கொண்டே இருந்தன. வீட்டின் வெண்ணெய் பானை, பசுக்கூட்டம் முதல் உரல் […]

சிவ வாக்கியார் பாடல்கள்- 1 to 10

சிவ வாக்கியார் – முன்னுரை. இந்து ஞானமரபில் முக்கியமான சித்தர் சிவ வாக்கியார், திருமூலரைப் போல அவரின் பாடல்களும் காலத்தை வென்ற தத்துவப் பேழைகள். சிறிய பூசணிக்கொடி பெரிய காய்களைச் சுமப்பதுபோல் பெரிய பெரிய தத்துவங்களைச் சுருக்கமாக சொன்னவர் அவர், அந்த எளிமையும் தத்துவமும் மகா ஞானமானது. அவரையும் அவரின் பாடல்களையும் ஒவ்வொரு இந்துவும் அறிந்துவைத்தல் நலம், ஆகச் சிறந்த ஞானம் அவருடையது, அதனை நாத்திகம் எனச் சொல்லமுடியாது. அதெல்லாம் ஞான சிகரத்தின் மேலிருந்து பொழியப்பட்ட தத்வார்த்தங்கள், […]

நாச்சியார் திருமொழி : 81

நாச்சியார் திருமொழி : 81 (பாசுரம் 10.8) அந்த மழைக்காலப் பொழுதில் ஆண்டாள் வழக்கம் போல் மனதில் குழப்பத்துடன் கண்ணனை நினைத்தபடி அமர்ந்திருந்தாள், எல்லா உயிரும் மயங்கி தன் துணையுடன் மகிழும் அந்தக் கார் காலத்தில் கண்ணனின் நினைவு அவளுக்குள் அதிகம் வந்தது. அது அனலாய் அவளுக்குள் கொதித்தது, கொதித்த மனதுடனும் குழம்பிய சிந்தையுடனும் அவள் வானம் நோக்கினாள். சக்கரவாக பறவைகள் மழைநீர் அருந்த உற்சாகமாய்ப் பறந்து கொண்டிருந்தன, வானத்தில் கரிய மேகங்கள் யானைகளை போல் நகர்ந்து […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications